22/3/24

இவள் அழகில்

 பெண் ௭ன்பவள் அழகானவள்!!!! 

அவள் பிறக்கும் போதே அழகாகிறாள் 

அவள் பாதம் இம் மண்ணில் படும் பொழுது

 இம் மண்ணையும் அழகு படுதுகிறாள்... 

அவள் தவழ்ந்து செல்லும் பொழுது 

தங்கமும் தோற்று விடும், அவள் நடந்து செல்லும்

 பொழுது நகரமும் வலைவீசும் இவள் அழகில்.....   

 ஒரு செடியில் இருந்து வரும் ஒரு பூ அழகென்றால்...

 ஒரு பெண்ணில் இருந்து வரும் 

இன்னொரு பெண்ணும் அழகுதானே.... 


கண்ணக்குழி

 அழகின் நகலாய் பிரம்மன் படைக்க..

 நிலவும் வெட்கும் கண்கள் மூடி

கண்ணக்குழி வழியே தவிழும் புன்னகை அழகோ.. 

எத்தனை கோடி, கருவிழி அழகில் மனமும் மயங்க

கண் அசைவே போதும் கவிதை வரைய..


21/3/24

அழகிய மலையே வா

 இயற்கை தந்த அழகிய குழந்தை நீ 

மனம் கொள்ளை கொள்ளும் விந்தை நீ,

நீ வந்தால் வளம் பெருகும் 

வறுமையும் காணாமல் போகும் 

செழுமை தழைத்தோங்கும் 

என்றும் வையகம் உனக்கு தலைவணங்கும் 

வெள்ளிமழையே வா, அழகிய மலையே வா.


20/3/24

நம் பாசம்

 பூக்கள் உதிர்ந்துவிடும் பூக்கள் உதிர்ந்துவிடும் ஏன்? 

தலைமுடிகூட உதிர்ந்துவிடும் ஆனால் என்றும் 

என்னெற்றும் உதிராமல் இருப்பது நம் பாசம் மட்டுமே....... 

பாலியல்

காலையில்  செய்திதாளில்  வாசித்த முதல்  வார்த்தை பாலியல்!

மேலும் தொடர மனம் மறுத்தது ஏனோ விரல் மட்டும் - அந்த

வரியில் இருந்து விலகவில்லை கண்ணும் விரலும் ஆலோசித்து

மனதை அமைதிப்படுத்தின. உதடுகள் எழுத்துகளை முனு முணுக்க

அந்த குழந்தையின் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால் வயது 

பன்னிரண்டு என்றிருந்தது எனது குட்டி தங்கை கண்முன்

வந்து போனால் - அந்த பச்சிளம் தன்னை மாய்த்துக் கொண்டால் 

ஏன் மாதவம் புரிந்திட வேண்டும். இப்படி மாய்த்துக்கொள்வா?

மேலும் வாசிப்பை ஆரம்பித்தேன் இதற்கெல்லாம் காரணம் கணக்கு வாத்தியாரம்

வேலி பயிரை கூடமேய்யும் ஆனால் -இங்கு விதையை விழுங்கி உள்ளது

கண்ணகி கலங்கி மட்டும் போயிருந்தால். அவளுக்கு வரலாற்றில் இடமில்லை.

கலங்கபடுத்தியவர்களை கலங்க வைத்தாள். கண் கலங்க அல்ல உடல் நடுங்க.


17/3/24

காதலென்பது நீயானால்

  இரவென்பது நீயானால்
நிலவென்பது நானாவேன்..

மலரென்பது நீயானால்
மணமென்பது நானாவேன்..

நீரென்பது நீயானால்
மீனென்பது நானாவேன்..

காதலென்பது நீயானால்
கண்ணீரென்பது நானாவேன்..

அவள் காதலால்

 கண்ணீரும் கதை பேசும்

கண்ணனின் முகம் கண்டால்

கவிதைகள் மெய் சொல்லும்

கைகள் எனை தீண்டினால்

கற்பனையில் வாழ்கிறாள்

ராதை அவள் காதலால்..

விழித்து உழைத்த ஏழை

 வாழ மறந்தவன் வாழ துடிக்கிறான்
 
படிக்க மறந்தவன் படிக்க துடிக்கிறான்
 
உழைக்க மறந்தவன் உழைக்க துடிக்கிறான்
 
அனுபவிக்க மறந்தவன் அனுபவத்திற்காக துடிக்கிறான்
 
காலத்தை மறந்தவன் காலத்திற்காய் துடிக்கிறான்
 
ஆனால் விழித்து உழைத்த ஏழை
 
ஒவ்வொரு கணமும் துடிக்கிறான்

தாயே என்றும் உனக்காக நான்

மாதவிடாய் காலத்தில் கஷ்டப்பட்டாய்....

மாதவிடாய் நின்ற காலத்தில் மகிழ்ச்சியடைந்தாய்....

ஏனென்றால் நான் கருவுற்றிருப்பனோ என்ற எண்ணத்தில்.... 

நான் வளர வளர நீ என்னை நினைத்தாய்...

என்னுடைய சின்ன சின்ன அசைவுகளை உணர்ந்தாய்... 

அதை தந்தையிடம் கூறி அவரையும் மகிழ வைத்தாய்..... 

பத்து மாதங்கள் கழித்து என்னை ஈன்றெடுத்தாய்..... 

கருவறையில் இருந்து நான் வெளிவரும் பொழுது நீ அழுதாய்!!! 

நான் வந்த பிறகு என்னைப் பார்த்து மகிழ்ந்தாய்....!!! அன்னையே....

தாய்மையின் வலி என்னவென்று எனக்கு தெரியும்..

 அதனால் பிறக்கையில் அன்று அம்மாவுடன் நானும் அழுதேன்...!!! 

கல்லறையில் நீ உறங்கச் சொன்னால் கூட உறங்கு வேன்.. 

"அம்மா" நீ வந்து தாலாட்டு பாடினால் போதும்!!!! 

தாயே என்றும் உனக்காக நான்!!!! 





நட்பு என்னும் படகில்

 நட்பின் ஆழம் கடலிடம் கேள் நட்பின் பெருமையை காற்றில் கேள்

நட்பின் அகலத்தை வாழிடம் கேள் நட்பை அடைந்தவர் பெற்ற ஒளியை 

சூரியனிடம் கேள் இவற்றின் முடிவை அறிந்தவனுக்கு நட்பின் முடிவு தெரியும்!!!!

அன்பு என்னும் கடலில்; நட்பு என்னும் படகில்; கரையடையாது....... 

கடலில் நீந்துவோம்; மீன்களைப் போல!!!!! 

பறக்கும் பறவைகளாகும் இருக்கும் நாம் - கீழிருக்கும் பள்ளத்தை

எண்ணி பயப்பட வேண்டாம்; குடும்பம் என்னும் வலையில் மாட்டு வதற்கு முன்;

நமக்கு கொடுத்த நேரத்தை கொண்டாடி மகிழ்வோம்!! குதுகலமாய்!! 

16/3/24

பிறந்த பிண்டமே வேண்டும்

மருந்தும் வேண்டா அமுதும் வேண்டா

இருந்தும் இருக்கா நிலையும் வேண்டா

விருந்தும் வேண்டா வருந்தும் நிலையும் வேண்டா

நிறைந்த அகமே வேண்டும் பிறந்த பிண்டமே வேண்டும்

திறந்த பார் அதிலே நிறைந்த பிணி அதுவாம்

தோல் போர்த்திய எலும்போ, வலிமை கொண்டு திகழ,

நடை ஓடும் பாரீர் தடை எதுவும் இல்லா

இது போதும் பாரீர் உயிர் மிதக்கும் அழகாய் 

உயிர் புதைக்க மணல் கொண்டு, தோல் உரித்த 

வெண்மை கோடு, தோல் உறுக்க அனல் கொண்டு,

மிஞ்சா வெண்மையே பொடி கொண்டு.
 
யாவருக்கும் இதுவே பாரீர்

நன்மை செய்திட்டு போவீர் பாரீர்!!!!!

இது தான் காதலா

 உன்னுடைய உணர்வுகள் உருவங்களாக என் மனதை தட்டுகிறது;

நான் உன்னை பார்க்க வேண்டும் என்று காதலித்த வலிகளை
 
விட திருமணத்திற்கு பின் வந்த நம்மிடையே ஏற்பட்ட
 
பிரிவுகள் தான் அதிகம் என்று நீ உணரும் தருணம்
 
நம் வாழ்க்கையில் நமக்கு புதிய பிறவி கொடுக்கட்டும் என்று

உன் உறவு வேண்டும் என்று நான் உன் மனதில் தட்டும் நேரத்தில்; 

என்னுடைய பிரிவை நினைத்து என் மனதை நீ தட்டுகிறாள் என்று இது தான் காதலா!

வீசும் காற்றிற்க்கு தெரியும் அதற்கு எல்லை இல்லை என்று

எனக்கு தெரியும் உன்னுடைய எல்லை உன் வீடு என்று

தைரியமாக இரு நான் உன்னை என்னோடு அழைத்து செல்வேன் என்று

உன் தைரியம் தான் நம் காதலுக்கு வெற்றி என்று



15/3/24

என் கனவே

என் கனவே என் கண்ணுக்குள் இருக்கும் நிலவே....

நீ இருக்கும் இடம் தெரியாமல் தவிக்கிறேன்....

அதை நினைத்து என்னை நான் வெறுக்கிறேன்....

அங்கும் இங்கும் ஒளிந்து உன்னை பார்க்கிறேன்....

அதை எண்ணி அனுதினமும் நகைக்கிறேன்....

சாப்பிடும் முன் உன்னை நினைக்கிறேன்....

உன்னை நினைத்துப் பசி மறக்கிறேன்....

இப்படி என்னை மாற்றின உன்னை

எண்ணி மகிழ்கிறேன் ஆச்சரியப்படுகிறேன்!!!

முயற்சி

தூங்கா இரவுகள் தொலைத்தூரக் கனவுகள்!

தோற்க்கடித்த சில நேரங்கள் தொலைந்திடா விடாமுயற்சிகள்!

துவளாதே என் மனமே கலங்காதே என் இருதயமே!

முன்னேறிச் சென்றிடு முழுமனதுடன் முயற்சி செய்திடு!

நிச்சயமாய் வென்றிடுவாய் தலைநிமிர்ந்து நின்றிடுவாய்! 

14/3/24

அழகான காலை

 மேகங்கள் நகர்த்திட!

 சூரியன் உதித்திட!

 மலர்கள் மலர்ந்திட!

 காற்று வீசிட!

 பறவைகள் பறந்திட!

 கோழி கோக்கரித்திட!

 குயில் கூவிட!

அம்மா எழுப்பிட!

நான் எழுந்திட!

அழகான காலை விடிந்திடுமே !!!
                                                       

13/3/24

உன்னை தேடி என்னை தொலைத்து

 என்னை உன்னிடம் தொலைத்து உன்னை தேடி என்னை தொலைத்து 

மீண்டும் தேடி உன் கைகளை பிடித்து உயிர் தெளிந்தேனேடி... 

உன் காதலுக்கு மலர் தோட்டம் அமைத்து உன் கண்களுக்குள் 

வண்ணத்துப்பூச்சியை பறக்க வைத்து, உன்னை சிரிக்க வைத்து 

என் காதலை பெற்று கொள்வேனடி வானில் உன் முகத்தை 

முகிலினால் அமைத்து உன் கைகளை கோர்த்து நிலவை ரசித்து 

நட்சத்திரங்களை நம்மை பார்த்து பொறாமை கொள்ளும்படி 

செய்ய வைத்து உன் சந்தோஷத்தால் உயிர் மோச்சம் பெருவேனடி... 

நம் வாழ்க்கையை உன் கைகளுக்குள் அமைத்து என் உயிரை

உன் உயிருக்குள் கலந்து என் உலகை உன்னால் மறந்து 

வரும் காலம் யாவும் நான் உனக்கே சொந்தமடி

நான் உன்னை யாரும் இல்லாத அளவுக்கு காதலிக்கிறேன் 




புதிர் நிறைந்த புத்தாண்டே

 புதிர் நிறைந்த புத்தாண்டே உன்னை வா என்று அழைக்கின்றேன்.....

உன்னில் பயணிக்க ஆயத்தமாகிவிட்டேன்....

ஆண்டுதோறும் புதுமை நிறைந்தவனாக வருகின்ற உனக்குந்தான்

எத்தனை....எத்தனை முகங்கள்......வையகத்தில் உன்னை 

வென்றெடுத்தவனும் இருக்கின்றான் பலியானவனும் இருக்கின்றான்...

ஆயினும் நீ.....நீயாகவே இருக்கின்றாய்....மீண்டும் மனிதனுக்கான

ஒரு நம்பிக்கை அது உனது பிறப்பு.....உனக்காகத் தான் இங்கு 

நாளும் மாதமும்கூட நகருகின்றது....மனிதம் பேசுகின்ற ஆண்டாக வா...

மடைமையை கொளுத்துகின்ற ஆண்டாக வா..மனதோடு மனங்கள்

பேசுகின்ற ஆண்டாக வா..வேற்றுமையை வேறறுக்கின்ற ஆண்டாக வா...

உயிர்கள் யாவும் உய்கின்ற ஆண்டாக வா...பஞ்சபூதங்களும்

 சமநிலை கொள்ள நின்னை வா என வரவேற்கின்றேன்.......!

11/3/24

உந்தன் கரம் கோர்க்க

 உந்தன் கரம் கோர்க்க ஏங்கிய

நாட்கள் கூட சுகமாகத்தான் இருக்கின்றன... 

உந்தன் கரம் கோர்த்து யோசிக்கையில்... 

9/3/24

திருமகளே வருக

 எல்லார் வாழ்விலும் விடியல் தரும் திருமகளே வருக.

புத்தடை அணிந்து புது பானையில்

 பொங்கும் வெண்மலரே வருக.

உழவனுக்கு உனவிட்டு பிறரின்
 
பசியற்றிடும் தானிய மகளே வருக வருக...

உயிர் போன்ற நட்பு

 பொன்னான உலகத்தில்
பொன் போன்ற நட்பு! 

கலை நிறைந்த உலகில்
கவலைப் தீர்க்கும் நட்பு!
 
செழிப்பான உலகில்
செம்மையான நட்பு! 

வளம் நிறைந்த உலகில்
வஞ்சனை இல்லா நட்பு!
 
சோர்வான என் உள்ளத்தில்
சோலை போன்ற நட்பு!
 
இளகிய என் மனதில் 
இன்பம் தரக்கூடிய நட்பு!
 
உறுதியான என் உள்ளத்தில்
உயிர் போன்ற நட்பு!
 
ஆக்கம் நிறைந்த உலகில்
ஊக்குவிக்கும் நட்பு!
 
நாளும் என்னுள் நிறைந்த 
நட்பு! நட்பு! நட்பு!