28/12/23

என் காதல் உனக்காக

உன் வார்த்தைகளால் மட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கும்

 என் காதலை அதே வார்த்தைகளால் வழி அனுப்ப நினைக்காதே......... 

நான் இருக்கும் வரை எனக்குள் துடித்துக்கொண்டே 

இருக்கும் இதய துடிப்பாய் என் காதல் உனக்காக...... 

அந்த கடவுளுக்கும் என் கண்ணீருக்கும் மட்டுமே தெரியும் 

நீ என்னை மறுக்கும் ஒவ்வொரு நொடியும் அனாதையாய் 

நிட்பது நான் மட்டும் அல்ல என் காதலும் தான் என்று........ 

உன்னை கட்டாய படுத்தவில்லை காதலிக்கையும் சொல்லவில்லை

 கடந்து போய்விடாதே என்கிறது  உனக்காக துடிக்கும் 

27/12/23

என்னை விட நீ அழகென்று

 மாங்குயிலும் மன்றாடி  கேட்குதடி மங்கை உன் இசைக்குரலோ?😅

 தேனீக்கள் மொய்க்குதடி மங்கை உன் தேனிதழில்?🫂

 வெளிச்சம்  மயங்கி முத்து மணி  முறைக்குதடி மங்கை உன் சிரிப்பழகில்?💋 

தோகை மயில் தோற்குதடி மங்கை உன் தோளழகில்?🌀♥️

மாங்கனிகள்  மண் விழுந்து மன்றம் வந்து  மாய்குதடி மங்கை உன் மார்பழகில்?

 சுற்றி கட்டிய  சேலையே  சுற்றி வந்து  சுத்துதடி மங்கை உன் இடையழகில்🙈💋 

கட்டழகு வடித்தே கொள்ளுதடி💯 படித்த உதடும் படுத்துதடி  என்னவென்று  

சொல்ல ஏங்கி தவிக்க விட்டாய், இது போதவில்லை என்றால்  நிலவை கேள்!! 

அதுவே வெட்கப்பட்டு கூறும் என்னை விட நீ அழகென்று!!!

26/12/23

இதுதான் காதலா

 உருவத்தால் தொலைதூரம் கண்ட நாம் உணர்வுகளால் 

ஒன்றாய் விடியல் காண நினைப்பது ஏனோ இதுதான் காதலா? 

 எனக்கான நண்பனாய் துணையாக என் வாழ்வில் வந்த நீ, 

என் வாழ்க்கை துணையாக மாறிய மாயம் என்னவோ. 

இருளில் நுழைந்த ஒளி கீற்றாய் என் வாழ்வை அலங்கரித்தவனே. 

உன்னவள் நான் உன் மூச்சுக்காற்றில் வாழ காத்துகொண்டிருக்கிறேன்.


18/12/23

காதலே உன் கனவிற்க்காக

   காதலே ! நீ தூறல் போல் தொட்டுவிட்டு , துறவி போல் 

இருந்த - என்னை  தூங்காமல் செய்து விட்டாய் !  காதலே !

 நீ பனித்துளி போல் முத்தமிட்டு, பகலவன் வந்தவுடன் 

என்னை  விட்டு மறைத்துவிட்டாய்!  காதலே ! 

நன் உன்னை படித்திருக்கிறேன் , ஆனால், துடித்ததில்லை! 

இன்று துடிக்கிறேன் - இதயத்தில்  அடிக்கின்ற ஓர் ஆணியைப்போல்!

  காதலே! கணவகள் வந்ததுண்டு எனக்கு , ஆனால், நான் காத்திருக்கவில்லை ! 

இன்று காத்திருக்கிறேன் , காதலே உன் கனவிற்க்காக .......

விடை குடுக்கிறேன் பறந்து செல்

   புழுவாக இருக்கையில் அரவணைத்து கொண்டேன்,
 
றெக்கை முளைத்தபின் என்னை விட்டு பறக்க துடிக்கிறாய்,
 
அன்பு என்னும் கூட்டில் உன்னை கட்டி வைப்பதைவிட விடை குடுக்கிறேன்

 பறந்து செல், நீ பறந்து செல்லும் அழகை காண்பது கூட அன்புதான்.

17/12/23

வின்னில் மின்னும் நட்சத்திரம்

 பூந்தேனைப் பருகிய போதையிலே மயங்கித் தள்ளாடிய வண்டொன்று 

கானக இருட்டிலே கவிழ்ந்தபடி வானக அழகை வர்ணித்துக்கொண்டிருந்து.  

நிலவில்லா கருவானத்திலே நட்சத்திர நயணங்களின் ஆட்டம்!

 வின்னிலே மின்னும் விண்மீன்களின் பூந்தோட்டம்! 

மின்னும் பூக்கள் வின்னிலிருந்து  மண்ணில் விழத்தொடங்கியது,
 மின்மினிப்பூச்சியாய்!
 
அடர்க்காட்டிலே ஆயிரம் விளக்குகள் அதை அசதியில் ரசித்த வண்டோ
 
"மின்னும் அழகு என்னில் இல்லையனில் என்ன? வின்னில் மின்னும்
 
நட்சத்திரம் நீயெனில் மின்னும் ஒளியின் பின்னணியான காரிருள் நான்"

 என்னும் எண்ணத்தை மனதில் நிறைத்தபடி மின்மினிப்பூச்சியின்
 
மத்தியில் பூந்தேனின் போதையில் மெய்மறந்து மண்ணில் உறங்கியது

கனவை நோக்கி ஒரு பயணம்

நிலையில்லா வாழ்க்கையில் பல கனவுகளை மனதில் சுமந்து கொண்டு ஓடுகிறான்..!! 
 
அதனை அடைய தடைகளை உடைக்கிறான்..!! உண்மைகளை ஏற்றுக் கொள்கிறான்..!!  

பிரிவுகளை கடந்து போகிறான்..!!  வலிகளை  பாதையாக  உருவாக்கிறான்..!! 

 அதில் அறிவை பயன்படுத்தி  பயணம் செய்கிறான்..!!  நேரத்தை  கருவியாக பயன்படுத்துகிறான்..!!
 
 எண்ணத்தைத்தை  ஒன்று சேர்க்கிறான்..!!  இப்படி நெடிய பாதையில் பயணித்து 

கனவாக  இருந்த  ஒன்றை இலக்காக மாற்றி வெற்றி அடைகிறான் மனிதன்!!!

காமராஜர்

 காமராஜர் கவிதை  கருப்பு வைரம் ஐயா நீ, 
 
கல்வி தந்தை ஐயா நீ,
 
 எளிமையின் உருவம் ஐயா நீ,
 
 ஏழைகளுக்கு தெய்வம் ஐயா நீ,
 
  சாதியை ஒழிக்க செய்திட்டாய் - மக்கள்

  சாதிக்க வழிவகை செய்திட்டாய்

 புண்ணியம் செய்திட்ட பூமியிலே - ஐயா

 புகழ் பாடி என்றும் மகிழ்ந்திடுவோம்!!!  

        காமராஜர் ஐயா புகழ் பாடி என்றும் மகிழ்ந்திடுவோம்!!!   

மரணம் வரை சுவாசிப்பேன்

 உன்னை முதலில் பார்த்த நெடியே முற்றிலும் விழுந்தேன்..... 

உந்தன் முழுமையை தேடியே நாளும் அழைந்தேன்.. 

கார்மேக மழையில் நனைந்த புல்லின் பசுமையோ... 

வெண்மேகம் முட்டி மோதும் மலையின் பதுமையோ... 

தேனீயின் தேடலுக்காய் மலர்ந்திருக்கும் பூக்களின் புதுமையோ...

வெள்ளி மணியாய் கொட்டி தீர்க்கும் அருவியின் ஆர்பறிப்போ....

இல்லை யாதும் ஊரென பறக்கும் பறவையின் கீச்சொலியோ....

நிசப்த நிமிடங்களின் வெண்பணியோ... வெதுவெதுப்பான கதிர் ஒளியோ... 

உன்னில் யாவும் அழகு தான் இங்கே.. இத்தனை அழகு கொண்ட உன்னை

 அந்த அழகின் அரசி விண்மீனும் வியந்து பார்க்கிறதே...

 என்னை வருடும் காற்றுக்கு காரணம் நீயே... 

காதலியே நான் வாழ கண் இமையும் நீயே.... 

கணம் கணம் உன்னால் என் கவலைகள் மறக்கிதே... 

தினம் தினம் என்னுள் புதுமைகள் பிறக்கிறதே... 

என்னையே என்னில் தேடும் அளவிற்கு உன்னில் மாயம் கொண்டேனே.... 

உயிர் தந்த உன்னிலே உயிர் வாழும் வரை உரைகிறேனே... 

மனம் கவர்ந்த உன்னை மரணம் வரை சுவாசிப்பேன்.......

மாயை தரணியில்

தரணியில்...நீர் துளி பல கலந்து கடலாய் படர்ந்து வெப்பமுற,

 கருமேகம் கருவுற்று  மழைத்துளி பிறந்தென்னை முத்தமட்டு தழுவும்.  

ஆறாக பெறுத்தோட நிலவொளியும் நழுவும். பச்சிலை மரங்கள்,

 இச்சையில் ஆடும் இலைகள்,  காற்றுடன் அன்பு பாட,

 மலர்கள் மகரந்தம் வீச பொன்மாலை மயங்கும்.  

பின், இரவு அது இயற்க்கை விதி இருளில் ஒளிரும் எழில்,மதி. 

ஏளனம் மிகுந்து மிளிரும் எழில். எனக்கிணை ஏதென்று 

ஒலிரும் பொருள். கதிரவன் உதிக்க, மின்னும் அதிகாலை துளி பனியும், 

 கர்வம் கொண்டு மதியும் வெட்க்கிகுணியும்.  

மாயை தரணியில்! கதிர் அவன் தன்னை போர்த்த, 

தரணியின் தோற்றம் அவிழும். மாயை தரணியில்...

14/12/23

விடை கொடுக்கிறேன் பறந்து செல்

   புழுவாக இருக்கையில் அரவணைத்து கொண்டேன், 

றெக்கை முளைத்தபின்  என்னை விட்டு பறக்க துடிக்கிறாய், 

அன்பு என்னும் கூட்டில்  உன்னை கட்டி வைப்பதைவிட

விடை கொடுக்கிறேன் பறந்து செல்,

 நீ பறந்து செல்லும் அழகை காண்பது கூட அன்புதான்.

13/12/23

நீ என் தேவதை

 நீ என் தேவதை. என் வாழ்வின் தேன்மழை. 

இன்பம் தந்து என்னை ,கொல்லும் காதல் மாயை, 

உன் இதய கோவிலில், என் உயிரே ஏற்றுவேன், 

வாழும் நாள் வரை, நாளும் எழுதுவேன்,

 உன் பெயரில், காதல் வாசகம், 

காதல் யோகி நான், உன் பார்வை ஓர் வரம், 

தேவன் சாட்சியாய், நெஞ்சம், கைகள் கோர்த்து, 

மாலை சூடலாம், ஏங்குதே என் எண்ணங்கள், 

உன்னிடத்தில் தண்டனைகள் கேட்கிறதே, 

நீயும் நானும், ஒன்றில் ஒன்றுமாய், 

தேகம் சூட்டில்,இரவை தீயிடலாம்...,

அவன் மயில் போலே

 வெள்ளி ரதம் மேலே வேலன் அவன் வீதி வர,

 வள்ளி அவள்  வாசலிலே வண்ணமிட, 

வையகமே காதல் கொண்டு 

ஆடுதங்கே அவன் மயில் போலே.....

12/12/23

வினாவுடன் காத்திருக்கிறேன்

 இலைமறைகாயாக இருந்த என் வாழ்க்கையை
 
இலையுதிர்காலமாக மாற்றியவளே!!!!!!!!!!

  இத்தனை காலமும் எங்கிருந்தாய்?… 

இதுவரை வீசாத வசந்தம் என் வாழ்வில்……

காணாத சுகந்தம் என் முகத்தில்…

தாமதித்தது உந்தன் பிழையா? 

அல்லது தேடாமல் இருந்தது எந்தன் பிழையா??……

வினாவுடன் காத்திருக்கிறேன்…

விடையாக நீ வருவாய் என்ற நம்பிக்கையில்……

ஏழையின் வாழ்க்கை

 வண்ணங்கள் நிறைந்த வானவில்லை போல்
 
நிறங்கள் நிறைந்ததல்ல ஏழையின் வாழ்க்கை,

 காக்கையின் கருமை போல் விடாது துரத்தும் பசி...
 
அதை விரட்ட நினைக்கும் கைகள்  பாலின் வெண்மை போல, 

எழுதபடாத காகிதங்களை போல வெறுமையானது. 

அந்த வெறுமையை துரத்த ஓடும் கால்கள் முட்களால் 

காயப்பட்டு வெறுமை செம்மை ஆகிறது...

செம்மை செழுமை ஆகிறது... இப்படி கருப்பு,வெள்ளை,

சிவப்பு கோடுகளால் நிறைந்ததே ஏழையின் வாழ்க்கை !..

8/12/23

உன் நினைவில் நான்

 காலையில் தோன்றிய கதிரவனாய்!
 
இரவில் தோன்றிய சந்திரனாய்!
 
என் மனதில் தோன்றியவள் நீயே...!
 
 இருள் போன்ற என் உள்ளத்தில்!
 
ஓர் அழியா ஜோதி போல் வந்தவளே!

 நதி போன்ற உன் நினைவால்

 என் உள்ளத்தை அலைபாய வெய்த்தவலே... 

ஒற்றை மரமாய் வாழ்ந்திட இருந்தேனே! 

உன் பாசத்தை என்நூல் விதையாய் விதைத்து! 

தனியாய் வாழ்ந்திட நினைத்த 

நான் உன்னால் உறவாய் ஆணெனே....

அவள் பார்வை என்னை துளைக்க

 அம்பாக அவள் பார்வை என்னை துளைக்க,
 
இரக்கமற்ற இந்த இந்த பெண் மீண்டும்

 புன்னகை என்னும் வேல் கொண்டு 

எந்தன் இதயத்தில் யுத்தத்தை நிகழ்த்துகிறாள்

 அடிமை படுத்ததானே போர் இவளிடம் 

அடிபணிந்த என்னிடம் எதற்காக போர்....  

3/12/23

காதலிக்க துடிக்கும் என் இதயத்தை

முன் ஜென்ம சாபம் தான் காதல் போலும்

  சிலருக்கு சுமையாக, சிலருக்கு சுவையாக.,,,,,.  
   
    என் காதல் பயணம் பாதியில் முடியும் 

என்று தெரிந்து இருந்தால் அன்றே நிறுத்தி இருப்பேன்

 காதலை அல்ல,,, காதலிக்க துடிக்கும் என் இதயத்தை,,,. 

உயிர் ஆனேன்

உன் நெற்றியில் குங்குமம் இட்டு  
   
 உன் கழுத்தை அலங்கரித்தேன்…
 
உன் புருவத்திர்க்கு இடையில் திலகம் ஆனேன் 
  
 உன் கால் விரல்களுக்கு இடையில் உயிர் ஆனேன்… 

நம்மை காக்கும் இயற்கையே

 இயற்கை  காப்பது நமது பொறுப்பு,  
அதில் காட்ட வேண்டாம் வெறுப்பு, 

 இயற்கை என்பது நமது பொதுவுடமை,
 அதைக் காப்பதே நம்தலையாய கடமை, 

 இன்று மரங்களிடம் நாம்காட்டும் நேசம், 
 அதுவே நம் சந்ததிகள் சுவாசிக்கும் சுவாசம்,
 
பகைஇல்லா வாழ்க்கையை கொடுப்பதை விட, 
புகையில்லா சூழலை  வழங்கிடுவோம் நம்குழந்தைகளுக்கு, 

நீலவண்ணம் கொண்ட நம்பூமி  மீதிலே,  
பச்சைவண்ணம்  பூட்ட புதுசபதம் ஏற்போம், 

 மனிதன்இன்றி இயற்கையால் செழிக்க முடியும், 
  மரங்கள்இன்றி நம்இதயம் எவ்வாறு சுருங்கிவிரியும், 
 
ஆளுக்கொருமரம்  வளர்க்கும் காலம் வரும்,  
அதுவே நல்லதொரு பாடம் கற்றுத்தரும்,

  நம்சந்ததிக்கு சொத்துகள் சேர்ப்பதில் பெருமைஇல்லை, 
 நல்லதொரு இயற்கையை உருவாக்க பொறுமைஇல்லை, 

 புத்தகங்களின் பாரம் வளைக்கட்டும் தண்டுவடத்தை,  
காற்றுஉருளைகள் பிடித்துவிடக்கூடாது அந்த இடத்தை,

 நாம் எவ்வாறு காக்கிறோம் இயற்கையை, 
தன்னாலே நம்மை காக்கும் இயற்கையே,

 இயற்கை என்பது கடவுளின் வரமாகும், 
அதுவே மனிதஇனத்தை காக்கும் அரனாகும்,

 நமது இயற்கை நமது பொறுப்பு, 
அதை காப்பதே நமது சிறப்பு,  

கண்ணாடியும் காதலும்

 எத்தனை எத்தனை முறை  எங்களை ரசித்து இருப்பாய்! 

எத்தனை எத்தனை முறை எங்களை கண்டு வஞ்சம் கொண்டிருப்பாய்! 

 எப்படி எல்லாமோ உன் முன் எங்களை அழகாக்கி கொண்டோம்!!

 இதுவரை இருவரும் உன் எதிர் நிற்கையில் ஆனந்தம் மட்டுமே!!  

ஆனால் இப்போதெல்லாம் அப்படி தெரிவதே இல்லை!!!  

அந்த ஒற்றை நொடி, நூழிலை வருத்தத்தாலா? 

இப்படி இருவரையும் காட்டுகிறாய்!!! கண்ணாடியே!  

  கண்ணாடியே, நீ இன்று உடைந்து சிதறாமல்,

 நாங்கள் சிதறியதை காட்டிவிட்டாய்!!!!!

தேடல் தான் தீராத வியாதி

 தேடல் தான் தீராத வியாதி என்னில்😒,

தேவையில்லா சிந்தனை ஏராளம் பெண்ணில்......

 😢இருந்தும் என் காதல் குறையாது உன் கண்ணில்....
 
இதுவே நிம்மதி🌹🫂என்றும் அன்பில்....

காதலித்தவரை காதல்  செய்வது உலகின் வழக்கமாய்

  இருந்தாலும் கண்டு கொள்ளாத உன் கண்ணை

 காதல் செய்வது என்னிருந்தே தொடக்கமாகட்டும்.......

2/12/23

அன்பு இல்லாத உலகில்

 அன்பு இல்லாத உலகில் ஆனந்தம் இல்லை,

ஆனந்தம் இல்லாத உலகில் நீ இருந்தும் பயன் இல்லை. 

அன்பு என்னும் பண்பு உன்னிடம் இருந்தால்,
 
நீயே பலர் வாழ்வில் ஆனந்தம் ஆவாய்.

அவள்

அவள் உதிரம் நமக்கு பாலாகிப்போனது...

அவள் சிந்திய வியர்வை துளி நமக்கு உணவாகிப்போனது...

அவள் வாங்கிய கடன் நமக்கு படிப்பாகிப்போனது....

அவள் செய்த தியாகம் நமக்கு வாழ்வாகிப்போனது...

அவள் கைக்குள் இருக்கும் வரை உலகம் சிரியதாகிப்போனது...

அவள் கையை விட்டு போனபோது அவளுடன் நிம்மதியும் சேர்ந்து போனது...

அன்று உணர்ந்தேன் அவள் தான் என் உலகம் என்று