12/12/23

ஏழையின் வாழ்க்கை

 வண்ணங்கள் நிறைந்த வானவில்லை போல்
 
நிறங்கள் நிறைந்ததல்ல ஏழையின் வாழ்க்கை,

 காக்கையின் கருமை போல் விடாது துரத்தும் பசி...
 
அதை விரட்ட நினைக்கும் கைகள்  பாலின் வெண்மை போல, 

எழுதபடாத காகிதங்களை போல வெறுமையானது. 

அந்த வெறுமையை துரத்த ஓடும் கால்கள் முட்களால் 

காயப்பட்டு வெறுமை செம்மை ஆகிறது...

செம்மை செழுமை ஆகிறது... இப்படி கருப்பு,வெள்ளை,

சிவப்பு கோடுகளால் நிறைந்ததே ஏழையின் வாழ்க்கை !..

0 Please share your thoughts and suggestions!: