17/12/23

மரணம் வரை சுவாசிப்பேன்

 உன்னை முதலில் பார்த்த நெடியே முற்றிலும் விழுந்தேன்..... 

உந்தன் முழுமையை தேடியே நாளும் அழைந்தேன்.. 

கார்மேக மழையில் நனைந்த புல்லின் பசுமையோ... 

வெண்மேகம் முட்டி மோதும் மலையின் பதுமையோ... 

தேனீயின் தேடலுக்காய் மலர்ந்திருக்கும் பூக்களின் புதுமையோ...

வெள்ளி மணியாய் கொட்டி தீர்க்கும் அருவியின் ஆர்பறிப்போ....

இல்லை யாதும் ஊரென பறக்கும் பறவையின் கீச்சொலியோ....

நிசப்த நிமிடங்களின் வெண்பணியோ... வெதுவெதுப்பான கதிர் ஒளியோ... 

உன்னில் யாவும் அழகு தான் இங்கே.. இத்தனை அழகு கொண்ட உன்னை

 அந்த அழகின் அரசி விண்மீனும் வியந்து பார்க்கிறதே...

 என்னை வருடும் காற்றுக்கு காரணம் நீயே... 

காதலியே நான் வாழ கண் இமையும் நீயே.... 

கணம் கணம் உன்னால் என் கவலைகள் மறக்கிதே... 

தினம் தினம் என்னுள் புதுமைகள் பிறக்கிறதே... 

என்னையே என்னில் தேடும் அளவிற்கு உன்னில் மாயம் கொண்டேனே.... 

உயிர் தந்த உன்னிலே உயிர் வாழும் வரை உரைகிறேனே... 

மனம் கவர்ந்த உன்னை மரணம் வரை சுவாசிப்பேன்.......

0 Please share your thoughts and suggestions!: