வார்த்தைகள் உதவாத போது மௌனமே துணையாகிறது
அவரவர் அகராதிகள் என்ன சொல்கிறதோ
அப்படியே அர்த்தம் கொள்ளட்டும்
அவரவர் பாஷையில் மொழி பெயர்த்து கொள்ளட்டும்
மௌனத்தின் இளைப்பாறலில் என்னை
நானே துாசித் தட்டிக் கொள்கிறேன்...
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2025 & 26 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
வார்த்தைகள் உதவாத போது மௌனமே துணையாகிறது
அவரவர் அகராதிகள் என்ன சொல்கிறதோ
அப்படியே அர்த்தம் கொள்ளட்டும்
அவரவர் பாஷையில் மொழி பெயர்த்து கொள்ளட்டும்
மௌனத்தின் இளைப்பாறலில் என்னை
நானே துாசித் தட்டிக் கொள்கிறேன்...
இருண்ட இரவின் மதியின் புன்னகையில்
நான் கண்டவுடன் நீ மறைந்தாய் கானல் நீராய்...
கனவிலும் உன்னையே சுற்றுகிறேன்
நீ தொலைத்த கடிகாரத்தின் நேரமாக!
விடைதேடிய விழிகளில் கண்ணீர்மட்டுமே மிஞ்சியது
காணவில்லையே என்பதற்காக அல்ல
கண்டதால் காயம் பட்டதே என்பதற்காக
அறியாத புதிர் ஒன்றை தெரியாமல் பிரித்ததால்
புரியாத காயம் ஒன்றை தெரிந்தே ஏற்றுக்கொண்டேன்
காரணம் கலையாத உன் நினையுங்கள் கண்ணீராக தேங்கியதால்.......!
பாதையாவும் பாதம்படும்வரை வெற்றிடமே!
சோலையாவும் மழைபெய்யும்வரை போர்களமே!
கோழையாக நீ இருக்கும்வரை
கேலியாகத்தான் ஊர் நகைக்கும்!
பேதைபோல மனம் பதைக்கும்!
ஆம்! உண்மை சற்று கசக்கும்!
ஆகையால், துணிந்து சபை ஏறிவிடு,
ஒருகை பார்த்துவிடு அடிமைப்பெண்ணே!
தலை நிமிரட்டும்! விழித்திமிரட்டும்!
மடமை உடையட்டும்! மெய்யியல் மலரட்டும்!
புதுமை பிறக்கட்டும்! பெண்ணியம் சிறக்கட்டும்!
யார் ஆதிக்கமாக இருந்தால் என்ன?
ஆணாதிக்கமாக இருந்தால் என்ன?
அதட்டும் உதடுகள் அடங்கட்டும்.
அடிமையென்னம் ஒழியட்டும்.
விடுதலை விடியட்டும்! பெண் சுதந்திரம் அடையட்டும்!
உனையொரு சிறுதுறும்பென நினைதிடும் - அவர்
முன்னிலே விண்மின்னையும் கரத்திலே பிடித்திடு
நாடாண்டு சென்றரசனுக்கு ஆயிரம் கையில்லையே..
அதை எடுத்துன்னறிவிலே இட்டு உணர்ந்தெழுந்திடு..