29/8/24

மௌனம்

 வார்த்தைகள் உதவாத போது மௌனமே துணையாகிறது

அவரவர் அகராதிகள் என்ன சொல்கிறதோ

அப்படியே அர்த்தம் கொள்ளட்டும்

அவரவர் பாஷையில் மொழி பெயர்த்து கொள்ளட்டும்

மௌனத்தின் இளைப்பாறலில் என்னை

 நானே துாசித் தட்டிக் கொள்கிறேன்... 


28/8/24

மேகத்தின் மோகம்

 கார்மேகமாய் தனிமையில் திரிந்தேன்; 

வண்ணமுகிலாய் என் வானம் வந்தாய்;
 
நாம் உரச மின்னலாய் என்னுள் கலந்தாய்;
 
என் மனதில், நீ முழுமதியாய் வளர்ந்தாய்!
 
நம் மோதலைக் கண்டு வானம், கரம் தட்டி மகிழும்;
 
நம் காதலைக் காண, புவியெங்கும் புன்னகை பூக்கும்!
 
உயிர்வளியாய் நீயும், நீரியமாய் நானும்,
 
வாழ்வில் ஐக்கியமானால் மாரியாய்
 
உலகம் சென்று, பூவின் மடி சாய்வோம்! 

கானல் நீராய்

 இருண்ட இரவின் மதியின் புன்னகையில்

நான் கண்டவுடன் நீ மறைந்தாய் கானல் நீராய்...

கனவிலும் உன்னையே சுற்றுகிறேன்

நீ தொலைத்த கடிகாரத்தின் நேரமாக!


திறமைக்கு தலை வணங்கி

 தேரோட்டி மகன் என்று ஊர் வசைப்பாட
 
சபையில் தலை குனிந்தான் எங்கள் கர்ணன்!

ஆனால், போரில் கர்ணனை எதிர்க்க

 தேரோட்டியாகவே வந்தான் கண்ணன்!

கடவுள் என்று கொட்டம்மடித்தாலும்!

 திறமைக்கு தலை வணங்கியே! ஆகும்.

நம் வாழ்விலும் ஓர்நாள் வானவில் வரும்

 பட்டமரம் கூட துளிர்க்கின்றதே மானிடா! -  மனம்

விட்டுப் போக ஒருநாளும் முயலாதே - தறி

கெட்டுப்போன நம் வாழ்விலும் ஓர்நாள் வானவில் வரும்...!

எட்டிப் போன வட்ட நிலவும் உன் கிட்ட வரும்....!

வண்ண நட்சத்திரங்களும் நிச்சயம் உனை முட்ட வரும்....!

தோழியின் அறிவுரை

 நீ கண்ணாய் இருந்தாள்- அவர் உன் இமையாய் காத்திட

அவர் காற்றாய் இருந்தாள்- நீ கொடியாய்  பரந்து  அவர் புகழ் பாடிட

நீ சமைத்தாள்- அவர் அதை அமிர்தமாய்  கொண்டிட

அவர் வீட்டினை கட்டினால் - நீ கோயிலாய் ஆகிட

 எப்பொழுதும் பாசத்தையும் அன்பையும் கொண்ட

 இல்லறத்தை அன்பும்; அரனு வழி நடத்திடு என் தோழி

ஊமை காதல்

 விடைதேடிய விழிகளில் கண்ணீர்மட்டுமே மிஞ்சியது 

காணவில்லையே என்பதற்காக அல்ல 

கண்டதால் காயம் பட்டதே என்பதற்காக 

அறியாத புதிர் ஒன்றை தெரியாமல் பிரித்ததால் 

புரியாத  காயம் ஒன்றை தெரிந்தே ஏற்றுக்கொண்டேன் 

காரணம் கலையாத உன் நினையுங்கள் கண்ணீராக தேங்கியதால்.......!


27/8/24

தூய்மை இந்தியா

 சாலையோரம் திகைத்து பார்த்தபடி இருந்த சிறுவனை

பார்த்த அந்தப் பொரியவர், என்னவாயிற்று என்றார்?

சிறுவன் கூரிய பதிலைக்கேட்டு சற்று கலங்கியபின் மௌனமாக சென்றார்.

ஐயோ! இந்த வண்டி இங்கு வரை வந்த விட்டதே,

வந்தால் என்ன நமக்கு பெரிய சாலை கிடைக்கும் அல்லவா!

உங்களுக்கு சாலை கிடைக்கும் அனால் எங்களுக்கு! 

வீடு கூட இருக்காது கலங்கியபடி நூறடி தொலைவில்

 சாலையொர தார்ப்பாய் போர்த்தபட்ட கொட்டகையை

 காண்பித்தான் வாழ்க(தூ)ய்மை இந்தியா! திட்டம்..


நட்பும் நலம் விரும்பியாக

 நட்பும் நலம் விரும்பியாக நாட்டம் கொள்ளுதே
 
என்னிடம் நடை பயணம் செய்திட! எல்லாம் நாட்களும் ....

என் உள்ளம்

என் உள்ளம் நோகுதடா என் ஆசை கண்ணாலா....

உன் கரம் பற்றாமல் என் நடைபாதையின்

தூரம் நீண்டு போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...

உன் ஆசை தீர்க்காமல் என் நித்திரை இரவுகள்

செலவாகி போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...

உன் தலையணை சேராமல் என் கூந்தல் மல்லிகை எல்லாம்

வாடிப் போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...

உன் அழைப்புகள் இல்லாமல் என் அலைபேசி ஓசை

ஜீவனின்றி போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...

உன் இதழ் ஈரங்கள் என் கண்ணக்குழி நிறைக்காமல்

தூரம் விளகி போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...






நம்பிக்கையுடன் நான்

 என் ஆசைகள் அனைத்தையும் கனாக்கண்டேன்....

அவைகள் நிஜமாக மாறாத என்று ஏக்கம் கொண்டேன்

சிறு உறக்கத்தின் பின் விழித்தெழுந்தேன்...

கண்ட கனவுகள் யாவும் களைந்து விட்டன கண் திருஷ்டியாக...

கண்டது என்னவோ கனவுதான் அது ஒரு நாள் 

கலையாக மாறும் என்ற நம்பிக்கையுடன் நான்...!!!

பெண் சுதந்திரம்

 பாதையாவும் பாதம்படும்வரை வெற்றிடமே!

சோலையாவும் மழைபெய்யும்வரை போர்களமே!

கோழையாக நீ இருக்கும்வரை 

கேலியாகத்தான் ஊர் நகைக்கும்!

பேதைபோல மனம் பதைக்கும்!

ஆம்! உண்மை சற்று கசக்கும்!

ஆகையால், துணிந்து சபை ஏறிவிடு,

ஒருகை பார்த்துவிடு அடிமைப்பெண்ணே!

தலை நிமிரட்டும்! விழித்திமிரட்டும்!

மடமை உடையட்டும்! மெய்யியல் மலரட்டும்!

புதுமை பிறக்கட்டும்! பெண்ணியம் சிறக்கட்டும்!

யார் ஆதிக்கமாக இருந்தால் என்ன?

ஆணாதிக்கமாக இருந்தால் என்ன?

அதட்டும் உதடுகள் அடங்கட்டும்.

அடிமையென்னம் ஒழியட்டும்.

விடுதலை விடியட்டும்! பெண் சுதந்திரம் அடையட்டும்!


26/8/24

என் அன்பே

 உன் பார்வை என் மீது படாத தருணம்

உன் குரல் கேட்காத தருணம் 

என் பேரை நீ அழைக்காத தருணம்
 
உன் சிரிப்பை சுவாசிக்காத தருணங்கள்
 
என் நெஞ்சை விஷமுள்ளால்

நெய்தாற்போல் வலிக்கிறது என் அன்பே!

காதல்

 ஒரு காத தூரத்தில் நின்று கொண்டிருக்கும் அவன் ..

ஏனோ கோனி இருக்கும் கண்மையினை பார்த்துவிட்டு ...

அலைபேசியில் திறுத்துகிறான்...

ஆயிரம் நொடி கண்ணாடியின் உள்ளீடாய்

இருந்த முகப்பில் ஒட்டிக் கொண்டு நின்றிருந்தும் ..

அவள் கண்ணுக்கு அகப்படவில்லை எதுவும் .

அவளின் அவனே காண்கிறான் எல்லாம் ...

அவளின் உள்ளீடாக இருந்து கொண்டு💞

முயற்சி

 வலிகள் தந்திடும் வெற்றிப்படிகள்,

விழிகளில் நீங்கிடும் கண்ணீர் துளிகள்,

சிலந்தியின் முயற்சி, அது மகிழ்ந்து

 வாழ்ந்திடும் இல்லத்தின் நெகிழ்ச்சி......

24/8/24

இவ்விரவு நீளாத

 பொழுது விடியும் என்று தெரிந்தும்

 உன் முகம் என் கனவில் தெரியும்

 என்பதற்காக இவ்விரவு நீளாத

 என்று பேராசையோடு தூங்குகிறேன்

அன்பு காதலியே

 உன்னிடம் பேசும் போது
 
பொழுதுப்போக்காகத்தான் தெரிந்தது

உன் பேச்சின் மென்மையைக் கண்டு

 என் மனம் பூத்துக்குலுங்குகின்றது

 என் அன்பு காதலியே......... 

தன்னம்பிக்கை

 உனையொரு சிறுதுறும்பென நினைதிடும் - அவர்

முன்னிலே விண்மின்னையும் கரத்திலே பிடித்திடு 

நாடாண்டு சென்றரசனுக்கு ஆயிரம் கையில்லையே..

அதை எடுத்துன்னறிவிலே இட்டு உணர்ந்தெழுந்திடு..


குருவின் அருமை

 கருவாய் எனை உருவாக்கிய குருவே உம் அருமை,

தெரியாமலே தறிகெட்டேன் சரியாக்கிடும்  நீரே...!!!

தறியாகினும் சரியாகிட உம்மிடமே மீண்டு வருவேன்...

முடியாதெனும் தடிவார்த்தையால் அடி கொடுத்து விட வேண்டா...!!!

காலடி ஆயினும் அடியேன் அதில் கிடையாய் கிடை கிடப்பேன்...

முடியாதெனும் தடிவார்த்தையால் அடி கொடுத்து விட வேண்டா...!!!

இறையும் இறைமறையும் பலத்துறையும் கற்றுக் கொடுத்தீர்...

என் குறையும் பல கறையும் அது மறையும் வரை வெளுத்தீர்...!!!

கருவாய் எனை உருவாக்கிய குருவே உம் அருமை...,

தெரியாமலே தறிகெட்டேன் சரியாக்கிடும்  நீரே...!!! - எனை சரியாக்கிடும்  நீரே...!!!

குழந்தைத் தொழிலாளி

 தேய்ந்த தோள்களிலே சாய்க்கும் சுமைகளுண்டு.

தள்ளாடும் தேகத்தை பந்தாடும் வலிகளுண்டு.

கல்லோடும் மண்ணோடும கரகாட்டம் நாளுமுண்டு.

கயிறோடும் பயிரோடும் சதிராடும் ஆட்டமுண்டு.

அனலோடும் புனலோடும் சடுகுடு ஆட்டமுண்டு.

கந்தகத்தில் குளியலுண்டு காலத்தின் அலங்கோலம்.

கால் வயிற்று கஞ்சிக்கு காடு மலை திரிந்ததுண்டு

மருண்ட விழிகளிலே மயக்கத்தின் மருட்சியுண்டு. 

பிஞ்சு விரல்களுக்கு நஞ்சோடும் நட்புமுண்டு.

பூந்தளிர் மேனியெங்கும் பிரம்புகளின் தழும்புமுண்டு. 

பிள்ளைக் கனியமுதின் பேரின்பக் காப்பியத்தின்

அவல நிலை கண்டு அல்லலுறும் அன்னை மனம்.

சில்லறை சில கண்டு அள்ளிட தினம் நின்று

துள்ளிடும் தந்தையின் தள்ளாடும் நிலை கண்டு

உள்ளிலே உயிர் சுருண்டு உறவதின் நிலை மறந்து

கொள்ளியின் கொதிப்பெனவே கொதித்திடும் மனம் கனன்று.