26/10/23
என் காதல் மட்டும் எப்படி உன்னைச் சேரும்
25/10/23
தாய் தமிழ் கவிதை
அண்டத்தை உனக்கு அறிமுகம் செய்ய குருதியை கொடையளித்து நீ பிறக்கையிலே!
உன் அழுகுரல் செவித்து பூரிப்பவளும் தாயே ! கண்டங்கள் உன்னை நெருங்கா
வண்ணம் கண்ணிமையென காத்து நீ வளரையிலே! உன் கண்ணீரை கண்டு
துடைப்பவளும் தாயே! புன்னகை மலராய்- நீ பூத்திருக்க கள்ளி முட்களின் மத்தியிலே
வாழ்ந்து-நீ இளைப்பாற இலைகளின் நிழலென நித்தமும் நிறைவாய்-நீ வாழ
அன்பென்னும் தொகையை மிகையாய் வழங்குபவளும் தாயே!
13/10/23
உண்டா தமிழ் கவிதை
உண்டு."
காளையார்கோவில் - ப.பவித்திரன்
15/9/23
முட்டாள்தனம்!
இரண்டு விஷயங்கள் எல்லையற்றவை:
பிரபஞ்சம் மற்றும் மனித முட்டாள்தனம்;
மேலும் பிரபஞ்சத்தைப் பற்றி எனக்கு
உறுதியாகத் தெரியவில்லை...
23/3/23
தமிழ்மொழியே!
3/10/22
5/9/22
29/7/22
வேற்று கிரக காதல்!
அவள் பிரிதலின் தூரம்,
கணகிலத்தா ஒளி ஆண்டுகளாக..
வேற்று கிரகத்தில்..
தனிமையில் மாட்டிக்கொண்ட
நம் காதலை..
அந்த ஜேம்ஸ் வெப் டெலிஸ்கோப்பை
ஒருமுறை தாருங்கள்..
நான் அவளை காதலிக்க..
ஆரம்பித்த மைய ஒளி ஆண்டையும்,
அவள் விட்டு விலகிய..
அந்த அணு வெடிப்பு நிகழ்வையும்,
எப்படி நிகழ்ந்தது..
என்று பார்த்துவிட்டு தருகிறேன்!
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
31/12/21
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்
புத்தாண்டு நல்வாழ்த்துகள் - கவிதைகள்: (2024)
வருடம் முழுவதும் சோதனை என்று எண்ணாதே! இயற்கை இன்னல்களையும், செயற்கை இன்னல்களையும் கடந்து, புது வருடத்தில் காலடி எடுத்து வைப்பதே சாதனை தான்!
உங்கள் வெற்றியும் மகிழ்ச்சியும் உங்களிடமே உள்ளது. மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தீர்மானியுங்கள்.
புத்தாண்டு நம் வாழ்வில் நிறைய புதிய மற்றும் அற்புதமான வாய்ப்புகளைக் கொண்டுவரும் என்று நம்புகிறோம். இந்த புத்தாண்டு நமது ஆண்டாக அமையும்.
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
16/2/21
90's Kids Kavithaigal (2021): 90ஸ் கிட்ஸ் கவிதைகள்
90s Kids Kavithaigal (2021): 90ஸ் கிட்ஸ் கவிதைகள்: (கவிஞர்களின் கவிதைகள்) (Tamil Edition) Kindle Edition
இந்த உலகத்தில் இருக்க கூடிய அனைத்தையும், ரசிப்பவர்கள் கவிஞர்கள் என்கின்றேன். இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன்.
கவிதைக்கு பொருள்?
ஒரு கவிதைக்கு பொருள் அல்லது அர்த்தம் என்ன? என தேடுவது மற்றும் விவாதிப்பதும் என்னை பொறுத்தவரை தேவையற்றது ஒன்றாகும். ஒரு கவிதை படிக்கும் போது என்ன உணர்வு தோன்றுகிறதோ! அதுவே அந்த கவிதையின் பொருள் ஆகும். ஒவ்வொருவரின் எண்ணங்களும், சிந்தனைகளும் வேறுபடும் ஆகையால் கவிதைக்கு யாரும் அர்த்தம் கற்பிக்க வேண்டாம். ஒரு ரசிகன் கவிதை எழுதும் பொழுது, அவன் எந்த சிந்தனையில் மற்றும் எவற்றையோடு ஒப்பிட்டு ரசிகின்றான் என்பது அவனுடைய அந்தரங்கம் போன்றது. ஆகையால் கவிதைக்கு பொருள் என்பது உங்கள் சிந்தனை பொறுத்து அமைகின்றன. நன்றி !
கவிதைகள் பற்றி:
இந்த புத்தகத்தில் இடம் பெற்றிக்கும் கவிதைகள் அனைத்தும் எனக்கு மின்னஞ்சல் மூலமாக பெற்ற கவிதைகள். முன்னதாக கூறியது போன்று ரசிப்பவன் அனைவரும் கவிஞர்களே. அப்படி ரசிக்கப்பட்ட சில கவிஞர்களின் கவிதை தொகுப்புகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும். கவிதை அனுப்பிய அனைத்தும் நண்பர்களுக்கும் எனது நன்றி மற்றும் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி எங்களது கவிதை தொகுப்பை படிக்கும் அன்பு வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் மிகவும் நன்றி! வருக !!!
இந்த புத்தகத்தில் இருந்து பெறப்படும் ராயல்டிஸ் (பணம்) அனைத்தும் உடல் திறன் மாற்றம் கொண்ட குழந்தைகளின் காப்பகத்திற்கு சென்றடையும் என உறுதி அளிக்கின்றோன்.
- தினேஷ் குமார் எ பி
1/2/21
காதல் அங்கு இருக்கிறது!
நாங்கள் ஒரு இடத்தில் கூடினோம்
இப்போது இருவரும் அங்கு இல்லை
நான் இல்லாதப் பொழுது,
அவள் பார்க்கின்றாள்..
அங்கு அவள் இல்லாதப் போது நான் பார்க்கிறேன்..
ஆனால் காதல் அங்கு இருக்கிறது...
இருவருக்கு பதிலாக..
28/11/20
என்னைக் காணவில்லை
நான் தொலைந்துவிட்டேன்! யுத்தத்திலா? அல்லது சத்தத்திலா?
எங்கே நான் தொலைந்தேன்?
ஓரு வேலை மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருப்பேனா?
இல்லையே
நன்றாகத்தானே நானிருந்தேன்!
அல்லது கொரோனா வார்டிலா?
அதுவும் இல்லையே!
பிறகு என்னவாயிற்டரெனக்கு?
பிறகு எங்கே தொலைந்தேன் நான்?
உழைப்பிலா? பிழைப்பிலா?
துப்புரவு தொழிலாளியின்
கால்களின் இடுக்கிலா? அல்லது
அவர் துடைக்கும் தொஷக்கயிற்றிலா?
இல்லை.. அயறாமல் உழைப்பதாக சொல்லப்படும் எனதருமை மருத்துவர் கண்களிலா?
இல்லை... அங்கும் இல்லை!.....
அரசு அலுவலகங்களிலா இல்லையே!..
அரசியல் களத்திலா? இல்லை..
நெஞ்சம் பதறும் அரசு ஊழியர் நெஞ்சப்புலத்திலா?
இல்லையில்லை!! வாய்ப்பில்லை!!
சவக்கிடங்கிலா? சாக்கடையிலா?
இல்லை! இல்லை!
என்னை யாரும் கொலை செய்திருக்க முடியாது!!
நான் யார்க்கும் அவ்வளவு பெரிய எதிரியல்ல!!
அப்படியானல் நான் எங்கே??
சொல்கிறேன் கேளுங்கள் உறவுகளே!
வாருங்கள்! என்னுடன் வாருங்கள் !...
குப்பைத் தொட்டியில் கிடக்கிறேன் பாருங்கள்!! ஆம்! குப்பைத் தொட்டியில் கிடக்கிறேன்
என்னைப் பாருங்கள்!
தினந்தினம் வீணடிக்கப்படும்
உணவுகளில்! பழங்களில்!
அங்காடி வீதிகளில்!
அரசு மருத்துவமனை நோயாளிகள் மிச்சம் வைக்கும் தட்டுகளில்!!!
ஆம்!!
பல சமயம் தொடாமல் வைக்கும் தட்டுகளிலும்!!!!
உணவுப்பிரிவு ஊழியர்கள் திரும்ப எடுக்காமல் விட்டுவரும் தட்டுகளிலும்!!!
ஆம்! புழுவாக மாறியிருக்கும் நேற்றைக்கு முந்தைய
உணவு த்துணுக்குகளில் ! ஆம்!
உணவியல் துறை சேர்ந்த நான்!!
புழுவாக மாறியிருக்கிறேன்!!!
ஓர் அரசு புழுவாக மாறியிருக்கிறேன்!!!🙂
-முனைவர் ஞா.சத்யா ஐயப்பன்
Kavithai Competition
தாய்மை
பிறந்ததிலிருந்து துயரத்தைக் காணாத ஒரு பெண் தன் குழந்தைக்காகத் தாய்மை வலியைத் தாங்குகிறாள்
தன் வலியை மறந்து தன் குழந்தையின் கண்ணீரைத் துடைக்கிறவள் தாய்
தனக்கு உணவில்லை என்றாலும் தன் குழந்தையின் பசியைப் போக்குபவள் தாய்
பெண்மையை உணரச்செய்வது தாய்மையே
செயின் இன்பம் தாயினால் மறைக்கப்படுகின்ற துன்பத்தில் அடங்கும்
தாய்மையை போற்ற ஒரே வழி தாயை மதிக்கவேண்டும்....அவர்களின் சொல்லை மீறக்கூடாது.....மகிழ்ச்சி அளிக்க வில்லையென்றாலும் துன்பமளிக்கக்கூடாது
-சுசிலா
Kavithai Competition
மன்னிக்க மறந்த நட்பிற்காக
கரையிலே நான் நடக்கையிலே ,
மறுபுறம் நீ வருகையிலே,
என் பார்வையில்,
நான் உன்னை சிரிக்கையிலே ,
உன் பார்வையிலே ,
நீ என்னை வெறுக்கையிலே,
நீயோ நகர்ந்து செல்லையிலே ,
நானோ நகர நினைக்கையிலே ,
என் நகர்வோ நடுங்கியது,
நீ நகர்ந்து சென்ற பாதையிலே
-அபர்ணா
Kavithai Competition
மண(ற)க்க
அன்றோ கடவுளிடம் வரம் கேட்டேன்
உன்னை மணக்க
இன்றோ கடவுளிடம் வரம் கேட்கிறேன்
உன்னை மறக்க
ஆனால் இந்த இரண்டு வரங்களும்
கிடைக்கவில்லையே இன்றுவரை
- நிவேதா கவிதா
Kavithai Competition
வாழ்க்கை
இங்கு வாழ்க்கை என்பது
அனைவருக்கும் ஒன்று தான்..!
அதை நாம் எப்படி
வாழ்கிறோம் என்பதில்
தான் உள்ளது..?
நம் வாழ்க்கை..!
-பாரதி
Kavithai Competition
24/11/20
ஆசான்
அறிவு கண் திறந்து..!
கனவு பாதை வகுத்து..!
கற்றாலும் கல்வியும்
மட்டும் கற்றுக் தராமல்..!
வாழ்க்கை கல்வி
கற்று கொடுத்து..!
வாழ்க்கை பாதை
அமைத்துக் தந்து..!
ஒவ்வொரு மாணவரின்
கனவிற்கும் இலட்சியத்திற்கும்..!
பின்னால் ஆசிரியர்
என்ற...
மாபெரும் துணை
உண்டு..!
மாபெரும் வெற்றி
உண்டு..!
- பாரதி
Kavithai Competition
சரியான போட்டி
இதுவரை எத்தனை பெண்ணும் அந்த ஒற்றை நிலாவிடம் தோற்றதில்லை!
இதுவரை அந்த ஒற்றை நிலாவும்
எந்த பெண்ணிடமும் தோற்றதில்லை!
- பாரதி
Kavithai Competition
மானே மரகதமே
சிவத்த மேனிக்காரி
கண்டாங்கிச் சேலைக்காரி
அச்சாரம் போட்டாச்சு மறைஞ்சுப் போவாதே
மாமன் மனசுக்குள்ள முழுவதும்
நிறைஞ்சிருக்க
கழனி எல்லாம் நிறைஞ்சு போச்சு
ஆத்தோரமா மாந்தோப்பில் காத்திருக்கேன் நானே
பாத்து பாத்து நடவு
செய்தா
பக்குவமா நெல்மணி பார்க்கலாம் கண்ணால
கதிரும் வெளஞ்சிடும்
கவலைகள் தீருமே
காளை மாடு பூட்டி
சந்தைக்கு
போகலாம் வெள்ளாமை
நிறைய வரும்
தைப் பொறந்தா கண்ணாலம் கட்டிடலாம்
இணைந்து சந்தோசமாக வாழலாம் ராசாத்தி
- உமா பாலகிருஷ்ணன்























