22/1/20

புத்தகம் எழுதி வெளியிடுவது எப்படி?

புத்தகம் வெளியிட ஆசையா?

உங்களது படைப்புகள் அனைத்தும், இ-புத்தகமாக அமேசானில் கிண்டலில் வெளியிடுகின்றேம். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், பெங்காலி, மராத்தி, கன்னடம், குஜராத்தி மற்றும் அனைத்து மொழிகளிலும், நங்கள் உங்களது படைப்புகளை வெளி உலகத்துக்கு எடுத்துச் செல்கிறோம், என்பதை மகிச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி?

how to publish a book on amazon

உங்களது கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு, பயணக்குறிப்பு, வரலாறு, வாழ்க்கை வரலாறு, சிறுகதை, கட்டுரை, கேள்வி-பதில், கையேடு, ஆய்வறிக்கை, பயிற்சிப் புத்தகம், இலக்கணம், கார்டூன், குழந்தைகள் சிறார் இதழ், சிறுவர் கதை, காமிக்ஸ் / கிராஃபிக் நாவல், விளக்கவுரை, நாட்டுப்புறக் கதைகள், விளையாட்டு, விடுகதை, பாடப்புத்தகம், திரைக்கதை அனைத்தும் தனி இ-புத்தகமாக & பிரின்ட், எனது பப்பிளிகேஷன் மூலமாக வெளியிடமுடியும். (ஈமெயில் - apdineshk@gmail.com) மூலம் தொடப்பு கொள்ளவும்.

புத்தகம் எழுதுவது எப்படி?

  •  உங்கள் புத்தகத்தை முதலில் எழுதுங்கள்.

  • நீங்கள் ஏன் ஒரு புத்தகத்தை வெளியிட விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.

  • புத்தகத் தலைப்பைத் தேர்வுசெய்க.

  • ஒரு சிறந்த புத்தக ஆசிரியரை நியமிக்கவும்.

  • புத்தக அட்டையை வடிவமைக்கவும்.

  • உங்கள் புத்தகத்தை வடிவமைத்து பதிவேற்றவும்.

    * இ-புக் என்றால் 70 சதவிகிதமும், பேப்பர் பேக் புத்தகம் என்றால் 30 முதல் 35 சதவிகித லாபமும் நிச்சயம்

    (ஈமெயில் - apdineshk@gmail.com) மூலம் தொடப்பு கொள்ளவும்.

16/1/20

திசைக்காட்டும் திருக்குறள் - (கவிதை போட்டி)

thiruvalluvar kavithai tamil

தமிழ்திருமகள் தந்த திசையெட்டும்
எம் திருகுறள் வெண்பாவில் ஈரடியாய்
குறளடி உடையது தமிழர் தந்த வரம்
மனிதனை செம்மைப்படுத்த
மனிதன் வகுத்துக்குடுத்த
வாழ்வியலை கற்றுக் கொடுக்கும்
உலகபொதுமறை பாரம்பரியம் போற்றும் நூல்
பண்பாளருக்கு பரிசாய் கிடைத்தது.
முப்பால் உணர்த்தும் முன்ணோர் பெருமை
திசை எட்டும் தித்திக்கும் புகழ்மனம்
வாழ்வியல் நெறிமுறை வளர்த்தெடுக்கும்
அறிவு ஊற்றாய் விசாலமான பார்வைக்கு வழிகாட்டும்
உத்ரவேதம்தனை வேதமாய் நினைத்து
படித்தால் இளயசமுதாயதயம் பயன்பெறும்
வாழ்வு செழிக்கும் வளம் கொழிக்கும்
பாகுபாடில்லா அனைவரும் சமம்
பொதுவுடைமை கருத்தை எடுத்துக் கூறுவது மிகச்சிறப்பு
இரண்டே அடிகளில் ஏழேச் சொற்களில்
உலகையே அளந்த ஒரு நூல்
எத்தனை அழகு
மனிதன் முதல் மாமன்னன் வரை
மலைத்துப் போகும் மிகச்சிறப்பு
அறிவியலும் உளவியலும் வியந்துப் போகும்
பொதுமறையாய்
திசைஎட்டும் தமிழ் மனம் வீசும் தமிழ் விளக்காய்
ஒளிவீசும் தமிழரின் வீரத்தையும் விவேகத்தையும்
எட்டுத்திக்கும் எடுத்துரைக்கும்
உலகமே போற்றும் பொதுமறையாய்
ஒளவைப் போற்றும் அறநூலாய்
செந்நாபோதரை போற்றி புகழவேண்டுமய்யா
முப்பால் உரைக்கும் அறம் பொருள் இன்பம் வீடு
நெறிமுறைக்கு சான்று எதையும் சுருங்கச் சொல்லி விளங்க
வாக்குவண்மைக்கு குறலடியே சான்று
உலகத்தத்துவத்தை எடுத்துக்கூறும் ஒப்பற்றநூல்
ஈரடிநூல் வெண்பாவின் குறட்பாக்களில் தனது வலிமையை உணர்த்தும்
தமிழ் இலக்கியக் கருத்துக்களை எடுத்தியம்பும் எழுத்தாணியாய்
தமிழர் நெஞ்சில் பதிந்த பசுமரத்தாணியாய்
எத்தனை அழகு  மின்னிடும் பொன்னாய்
உரக்க சொல் உலகிற்கு
- சரண்யா. ஆர்

Tamil Kavithai Competition

திருக்குறள் சிறப்பு கவிதை: Explore the timeless wisdom of Thirukkural through exquisite Tamil kavithai. Discover the profound verses of Thiruvalluvar in Tamil and Kavithai dedicated to Thirukkural. Delve into the world of poetic expressions inspired by the moral and ethical values of Thirukkural.

கன்னத்தில் விழும் குழி - (கவிதை போட்டி)

kanna kuzhi kavithai in tamil
சிரிக்கும் போது சிலருக்கு கன்னத்தில் விழும் குழியை பற்றி உருவக கவிதை.

எத்தனையோ முறை நான் இடறி விழுந்தும் உன் கன்னத்தில் ஆழவட்டம் அமைக்கிற அந்த குழியை ஏன் நீ மூடாமல் இருக்கிறாய்.....

அலை இல்லாத உன் கன்னத்தில் அது என்ன நீர் சுழி.....

ஈரமாகி விட்ட உன் கன்னத்தில் அது என்ன சங்கு சக்கரம்.....

ஆழ் கடல் தீவில் அது என்ன அமிழ்ந்து தோன்றும் அதிசய தீவு.....

இது என்ன இயற்கை உனக்கு மாத்திரமே காட்டுகின்ற சலுகையா.....

பூவரச மொட்டு உன் கன்னத்தில் எப்படி வந்தது.....

பாதரச பூவே நீ உள் வாங்கிய மனித பூச்சிகள் ஏராளம்.....

சதை சுழிப்பே நீ விஷம் தான். என் உயிர் நெருப்பை ஊதி வளர்க்கிற விஷம்.....

உன் தொப்புள் எப்படி சருக்காமல் கன்னம் வரைக்கும் ஏறி வந்தது.....

- அப்துல் ஹக்கீம் பாஷா

Tamil Kavithai Competition


8/1/20

அப்பா - (கவிதை போட்டி)


appa kavithai in tamil

மூன்று எழுத்து மந்திரம்  என் தந்தை

அறிதாய் எனக்கு கிடைத்தது அன்பு பொக்கிஷம்

உன்னைப் போல் யாரும் இல்லை

இவ்வுலகில்

உன் ஆசைகளை துறந்து

எங்களை சீறாட்டி பண்பாய் பாசமுடன் வளர்த்து

ஆனந்த வாழ்வியலை  அன்பாய் எங்களுக்கு

காட்டினீர்கள்

விபத்து ஒன்று நடக்கவில்லையெனில்

விருட்சமாய் வளர்ந்த நாங்கள்

உள்ளகோவிலை  உயர்வாய் அமைத்து உங்களை கொண்டாடி மகிழ்கிறோம் இன்று

என்ன ஆச்சரியம்

துன்பம் ஒன்று வரும்போது அதை துனிவாய் கையாலும் அழகு

துன்பம் ஒன்று வரும்போது

உங்கள் மார்பில் சாய்ந்து அழ துடிக்கிறது

என் மனம்

நடக்கும் தூரம் கொஞ்சம் வா மகளே

நளினமாய் நடைப் பயின்று என் நகைச்சுவையை  ரசித்து

மனமகிழ்ந்து கொடுக்கு முத்தம்

எத்தனை பேரானந்தம்.

இன்றும் என் இன்பநினைவுகளில்

நீங்கா நினைவுகள்

நிதம் தவித்து அழுகிறது  நிஜத்தை எண்ணி

பாசத்தில்

எனக்கு மறு குழந்தையாக

உங்களை சுமக்க ஆசைப்படுகிறேன் இன்று

உங்கள் பிரிவையென்னி

குருடனாய் பிறந்த உங்கள் பார்வை தான் குறைந்ததே தவிர

அறிவு பார்வை எவ்வளவு விசாலமானது

படிப்பறியா மேதை  பாமரரும் போற்றும் வகையில் வாழ்ந்து பரமனின் பாதம் நோக்கி சென்றாயே

நினைக்கையில் மனம் பிரமித்து பெருமைக் கொள்ளும்

என் முதல் மாதிரி என்றும் நீங்கள் மட்டும்தான்

உழைப்பு , கடமை, கண்ணியம், மனிதநேயம், பாசம், பரிவு இவை எல்லாம் உயர்வாய் உயரமாக இருந்ததால் தானோ கடவுள் எங்களை தவிக்க விட்டு உம்மை அழைத்து கொண்டாரோ

விதி வலியது  கைவண்டி இழுத்தாலும் கண்ணீயமாய் எங்களை வளர்த்தீர்கள்

தீபாவளி பொங்கல் என்றால் இமையொரம் கனவு தோன்றும் மூன்பே

புத்தாடை வாங்குவிர்கள் பூரிப்பை புன்னகையால் காட்டுவீர்கள்

பாப்பா என்று அழைக்கையிலே பக்கத்து வீட்டுகாரும் வியப்பாய் பார்பர்

கண்பட்டு விட்டது அப்பா நம் அன்பிற்கு

அவ்வளவு அழகு வார்த்தையிலே அன்பு

நடையும் நளினமும் இனி யாருக்கு வரும்!

கண்பட்டு விட்டது அப்பா நம் அன்பிற்கு

மந்திரமாய் மாதவமாய் நீ கிடைக்க என்ன தவம் செய்தேன் நான்.

என் அப்பா என்று அழைக்கையிலே ஆசானும் வியப்பாரே பள்ளியிலே

தோழனும் , தந்தையும், இரண்டற கலந்த கவிதை நீங்கள் எமக்கு.

சொர்கம் தனிளே சொகுசாய் வளர்த்து

சோதனையில் விட்டு சென்றாய்

சொந்தமும் ஏங்கும் பந்தமும் ஏங்கும் உமது பிரிவை எண்ணி.

நினைத்துவாடும்  உங்கள்  நீங்கா நிழல்கள்

கவலை என்று நினைத்தாளே கண்ணீர் வரும் ஊற்றாய்

கதறும் என் கண்கள் உம்மை நினைத்து.

- சரண்யா ஆர்

Tamil Kavithai Competition



அம்மா - (கவிதை போட்டி)

mother tamil kavithaigal
உருவம் தோன்றும் முன் ஓர் அறிமுகம் உன்னுடன்....
உன்னுள் ஓர் உயிராய் உருண்டோடி,
உன் இதயத்துடிப்பின் மெல்லிசை கேட்டு சிறக்கடித்தேன் உன் கருவறையில் !!!
என் விழிகள் திறக்காமல் ,உன் கருவறையில் கைகோர்த என் முதல் தோழியே....
நான் இவ்வுலகம் தொட,
உண்ணுயிர் மறந்து என்னுயிர் காத்தாய் ....
முதன்முதலில் இவ்வுலகின் ஓசை கேட்டு அஞ்சினேன்...
என்னை உன் இதையத்தோடு கட்டி அணைத்தாய்,
அழுகை மறந்தேன் என்னவள் வாசம் கண்டு..
என்னவள் மடி தவழ்ந்து,
மழலையாக அவளை வலம் வந்தேன்..
என்னவள் கண்கள் சிவக்க,என்னை துயில் கொள்ள செய்த என் தேவதை...
பள்ளியில் அடி வைக்க, அவள் மடி இறங்கினேன் ...
பணியில் அமரும் பொழுது,அவள் கை பிரிந்தேன்...
இன்றும் என் மனம் அழைக்கிறது...
அம்மா, உன் மடி தா
தலைசாய்ந்து,
ஒரு துயில் கொள்ள வேண்டும்,
இதரணியை மறந்து!!!!

- ச. மதுமதி

Tamil Kavithai Competition


புத்தாண்டே கற்றுக்கொடு - (கவிதை போட்டி)

new year kavithai in tamil

அமைதியினை அள்ளிக் கொடு
அன்பாய் இருக்க கற்றுக்கொடு

ஆழ்நெஞ்சில் ஈரம் கொடு
ஆட்சியர் நல்லாட்சிக்கு கற்றுக்கொடு

இல்லாமையை நீக்கிக் கொடு
இல்லறமே நல்லமாக்கிட கற்றுக்கொடு

ஈனர்களின் அழிவைக் கொடு
ஈகையை வளர்க்கக் கற்றுக்கொடு

உன்னத மனிதர்கள் அள்ளிக் கொடு
உண்மையுடன் செயலாற்ற கற்றுக்கொடு

ஊனமற்ற மனதைக் கொடு
ஊக்கம் வளர கற்றுக்கொடு

எல்லாம் எல்லாம் பெருக்கிக் கொடு
எளிமையுடன் வாழ கற்றுக்கொடு

ஏமாற்றங்களை நீக்கிக் கொடு
ஏற்றத்திற்கான முறையைக் கற்றுக்கொடு

ஒற்றுமையின் உன்னதம் கொடு
ஒன்றாய் இனைந்திட கற்றுக்கொடு

ஓலச்சத்தங்கள் அற்றுக் கொடு
ஓர் மனிதமெனக் கற்றுக்கொடு

ஔடதம் ஒழித்துக் கொடு
ஔவை வரிகளின் வாழ்க்கை கற்றுக்கொடு

கொடு புத்தாண்டே கற்றுக்கொடு
- அன்னமுரளி 

31/12/19

குண்டுகள் துளைக்காத கவசம் (கவிதை போட்டி)

love failure kavithai
வேறு மனம்
குண்டுகள் துளைக்காத
கவசம் கொண்டு
கட்டப்பட்ட மனம்  -இடிந்தது
கடுஞ் சொற்கள்
கேட்ட கணம் !
காக்க வேண்டும் -வேறு
கவசம் கொண்டு -இல்லை
கேட்க வேண்டும் எதையும்
கடந்து செல்லும் மனமொன்று
 -வி .ஆஷாபாரதி

Tamil Kavithai Competition


27/12/19

விவசாயி (உழவன்) - (கவிதை போட்டி)

vivasayam kavithaigal
உயிர் வாடிய காலம் சென்று!
பயிர் வாடி அழிகிறது இன்று !
அணைத் திறந்து பயிரிட்ட நீயோ,
வினை மறந்து பயணிப்பது ஏன்?
பொங்கல் வைத்து நன்றி கூறிய
நன்றி மறவா நல்லவனே!
உனக்கு நன்றிக் கூற வாய்ப்பிது!
உனக்கு வந்தனை செய்வதில் எனது சிறுப்பங்கு இக்கவிதை!
வாழ்க உழவும் உழவனும்!
வளர்க தமிழும் தமிழரும் !!
- நா ஈஸ்வரன்

இயற்கை தந்தன இனிமை - (கவிதை போட்டி)

natural tamil kavithai image

அந்தி சாயும்  நேரம்பிறை நிலவும் சூரியனும் 
குளிர்ந்து தன் அழகை பிரதிபலிக்க
ஒய்யாரமாக வளர்ந்து  வானத்தை பார்த்து
விருட்சம் நின்றிருக்க...

இலைகளாய் உருவாக்கி சிட்டுக்கள் வீற்றிருக்க 
வித்தகம் தந்து செயற்கை விளக்கை கண்டு 
எகத்தாளம் செய்தது இயற்கை...

இனிமையான கானம் இசைத்து பட்சிகள்
தங்கள் இருப்பிடத்தை அணுக...

பாரெங்கும் பயணித்து கலைத்தது
மாலைப்பொழுததை தனதாக்கி.

மயக்கும் தனிமையை ரம்யமாக்கி சென்றது
இதுவல்லவோ வியக்கும் விந்தை உலகம்!

- உமா பாலகிருஷ்ணன்

Tamil Kavithai Competition

 

நட்பு அழகானவை - (கவிதை போட்டி)

friends kavithai tamil
நட்பு
என்று தெரியா அன்பு அது
அறியா வயது ... குட்டை பாவாடை
போட்ட நாட்கள் அவை ... அத்துனை
*அழகானவை*...

*வெள்ளியும் ஞாயிறும்*
தொலைக் காட்சி காணுகையில்
கையில் தொலைக்கா நேசம்
விரல் பிடித்திருக்கும் அவை ... அத்துனை *அன்பானவை* ...

பதினாறு தாண்டா பருவமது
பாவாடை தாவாணி வீதி உலாவில்
அரும்பு மீசை தொடரும் போது
அச்சம் கொண்டு கை பிடித்து
நடையில் வேகம் காட்டும் அவை... அத்துனை *பாதுகாப்பானவை*...

கல்லூரியில் விலங்காத விலங்கியல்
நானும் ... தடுமாறும் தாவரவியல்
நீயும் படித்து முடித்து சின்னதொரு
கையேட்டில் கையெழுத்து
வாங்கி விடைபெற முடியா ஆனாலும்
மணம் முடித்து விடைப்பெற்றோம்
*விடுமுறையில்லா இயந்திர வாழ்வில்*...

அழைப்பு வரதான் செய்கிறது காலங்கள் மாறினாலும் ...

இரு ஒரு நிமிசம் *இடைவேளையில்*
பேசுகிறேன் என நீயும் ...

அவருக்கு *சட்னி போடுகிறேன்*...
இரு கூப்பிடுகிறேன் என நானும் ...

*உதடுகள் நான்கும் உரைக்க* தான் செய்கிறது ... காலத்தின் வேகத்தில் ..

ஆயினும்
உள்ளம் நினைக்க தான்
செய்கிறது *நட்பினை* ...

*முப்பது அகவையினை* தொட்டது
அல்லவா அது ...
பசுமை மாறா நினைவினை
சுமந்த வண்ணம் நாளும் ...

- அம்மு தண்டபாணி

Tamil Kavithai Competition

சிறகில்லா பட்டாம்பூச்சி - (கவிதை போட்டி)


butterfly kavithai
 வெற்றிடம் எங்கும் பரவிக் கொண்டிருக்கும் காற்றிற்கு‌ கூட பிரிவினையை வகுத்த - இந்த பிரிவினைவாதிகளின் தேசத்தில் கருவிலேயே பிரிவினைக் காற்றினை சுவாசிக்கத் தொடங்கியது
இந்த உலகத்தை காணாத பிஞ்சு மழலை - பாவம்
தன்னிகரில்லா உலகில் தனக்கோர் அடையாளத்தை தேடிக் கொண்டே இருக்கிறது- இந்த "சிறகில்லா பட்டாம்பூச்சி".
 - ப.முருகன்

12/12/19

பட்டாம்பூச்சி கவிதைகள் - (கவிதை போட்டி)

butterfly kavithai in tamil
Pattampoochi kavithai in Tamil
பட்டாம்பூச்சி காதல் கவிதை


அடர்ந்த காட்டில்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
மேனியில் குறுந்தகை மின்னிட
இளஞ்சூரியன்  ஆரஞ்சு வண்ண
மை தெளித்து தங்க பொட்டு வைத்த
பட்டாம்பூச்சி ஒன்று
என்னருகே வந்தது!

தொட்டுப்பார்க்க கரம் நீட்ட
வெட்கத்தில் நாணி சிவந்து கொண்டது!
உயர்திணை அஃறிணை கடந்து
பட்டாம்பூச்சி என்னிடம் ஏதோ பேச வர
புது உலகில் ஐக்கியமானோம்

சுதந்திரவாதி என்னை
அருங்காட்சியத்தில் சிறை
வைக்கிறார்கள் என்று
வருத்தப்பட்டுக்கொண்டது! ​
பொதுவாய் சொல்லி வைத்தேன்
சுதந்திர நாட்டின் அடிமைகள்
நாங்கள் என்று!

ஒப்புக்கொள்வதாய் இறக்கை அசைக்க
புன்னகையோ என நான் அதிசயிக்க
பெயரென்ன என கேட்டதற்கு
மெல்லமாய் காதருகே
செல்லமாய் "காதலி" என்றது!

பெயரா? அழைப்பா? என்றேன்...
இயற்கை காதலர்கள்
நீங்கள் மட்டும் தானா?
இயற்கை உங்களை
காதலிக்க கூடாதா?
என்றவாறே பறந்து சென்றது...

காதல் சிறையில்
நான் சிக்கிக் கொள்ள
என் “காதலி”
பட்டாம்பூச்சியோ சுதந்திரமாய்
வானில்!

#ஜெயராஜனோ
 

Tamil Kavithai Competition

Experience the delicate beauty of butterflies through enchanting Tamil kavithai and poems. Explore heartfelt butterfly kavithai in Tamil, a poetic celebration of nature's winged wonders. Let your imagination take flight with captivating butterfly poems in Tamil, each verse a tribute to the grace and charm of these enchanting creatures. Dive into the world of butterfly kavithai, where words flutter like butterflies, painting vivid images in your mind.

5/12/19

உன் நினைவாள் - (கவிதை போட்டி)

tamil feeling kavithai
Sad Tamil kadhal kavithai
நினைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்கிறேன்
என் அன்பே...
உன் நினைவுகள் என்னை கொள்கிறது
உன் நினைவுகள் என்னை துரத்துகிறது
நான் இங்கு இல்லை
நீ தான் என்னுள்ளில் இருக்கின்றாய்
ஆழ்கடலை போல என் உள்ளம்
அமைதியாய் இருக்கிறது
உன் நினைவாள்...

- பொற்கொடி

Tamil Kavithai Competition


2/12/19

காதலாய் - (கவிதை போட்டி)

love feeling kavithaigal
feeling kavithai image

காதல்

எழுதிய
எழுத்துக்களிலெல்லாம்
நீயே ஒளிந்திருக்கிறாய்
காதலாய்!

வாசம்

நீளும் மழையிரவில்
என் பிணி தீர்க்கும்
மாமருந்து
அவளின் வாசம்...

கூடு

ஓரே கிளியின் கூட்டுக்குள்
முகவரி எதற்கு என்றாய்
இருந்தாலும் என்றேன்
இன்று என் முகவரி தேடுகிறேன்.

புத்தன்

ஆசைகளை
மறைத்தும், ஒளித்தும்
வாழும் வேளையில்
நாமும் மாறிப்போகின்றோம்
வாழும் புத்தனாக.

S. அப்பாஜி

Tamil Kavithai Competition

28/11/19

ஒருபோதும் நீ அறிந்ததில்லை - (கவிதை போட்டி)


love failure kavithaigal imag
love failure kavithai

என் பொறுமையில் துளியும் உனக்கில்லை என்கிறாய்....

என் அருமையை ஒருபோதும் நீ அறிந்ததில்லை என்கிறாய்...

என் வலிகள் உனக்கு புரிந்ததில்லை என்கிறாய்....

நான் அறிந்ததும் புரிந்ததும் என்னுள் தோய்ந்து கிடக்கின்றன....

அதனால்தான் உன்னை எண்ணும் பொழுதெல்லாம்

நான் காதலில் அமிழ்ந்து போகின்றேன்....

- சரண்யா சின்னக்கண்ணு

25/11/19

இன்றோ அமாவாசை - (கவிதை போட்டி)

அருள்வாசன் கவிதை - கவிதை போட்டி!

கவிதை போட்டி

காற்றில் கரைந்தது கீதம்
காக்கைக்கு அவளிட்ட அண்ணம்
கா கா காவென்று கூவியே!
ஒலியின் திசையில் முழுநிலா
அடடே என்ன அதிசயம்
இன்றோ அமாவாசை!

 - அருள்வாசன்

Tamil Kavithai Competition

அன்புடன் மனைவி

Kanavan Manaivi Tamil Kavithaiஅன்பே, நீங்கள் என்னைப் பிடிக்கும்போது,
​​எனது உணர்ச்சிகள் அதை வரவேற்கிறது.

அன்புடன்!

உங்களது இதயத் துடிப்பை 

நான் இசை தாளத்துடன் கேட்கிறேன்.
வரிகளின்றி!

ஒவ்வொரு அணைப்பிலும், வெப்பத்தின் அன்பினாலும்  
என்னைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது - உங்களது
அணைப்பு.

காதலனே, நீ மிகவும் மென்மையாகவும், 
வலிமை மிக்காக கைகளால் 
என்னைத் தொடும்போது,
நான் எங்கிருந்தாலும், உடனே 
உங்களுடைய அரவணைப்பில்
என்னை மூடிக்கொள்கின்றேன்.


நீங்கள் என்னை நெருக்கமாக 
பிடித்துக் கொண்டு
இரவு முழுவதும் என்னை ஆறுதல்படுத்துகிறீர்கள். 
அடடா...

பகல் வெளிச்சத்தின் முதல் அறிகுறி!
நீங்கள் என் கன்னங்களில் தரும் முதல் முத்தம்.

உங்களது நாளைத் தொடங்குவதற்கு முன்பு 
நீங்கள் என்னை கட்டியணைத்து 
முத்தமிடுவதிலில் தொடங்குகின்றன.

நீங்கள் எனது இதயத்தில் கொண்டு வரும் மகிழ்ச்சிக்கு, 

எந்த தமிழ் வார்த்தை பயன்படுத்தி நான் கூறுவது.

நீங்கள் என் வாழ்க்கையை மிகவும் அழகாகவும், 

அற்புதமாகவும், புதியதாகவும் மாற்றுகிறீர்கள். 
எப்படி ?

நீங்கள் என் நம்பிக்கை மற்றும் கனவுகள். 
சொல்ல போனால் எனக்கு அனைத்தும் நீங்கள் தான்
நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.


- அன்புடன் மனைவி

28/9/19

எது உண்மை

kavithai unmai

இதில் ஒரு பொய்யுண்டு!
ஒரு உண்மையுண்டு!
எது பொய்? எது உண்மை?
நிலவு உன்னை போன்று இருக்கு!
உன்னை போன்று நிலவு இருக்கு!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா


எது பொய் எது உண்மை கமெண்ட்ஸ் பண்ணவும் மறக்காமல் நன்றி!.. :)

15/3/19

கடத்தல் செய்கிறாள்!

new kavithai in tamil

எப்போதெல்லாம்
தனிமையில் என்னோடு நான்
உரையடிக்கொண்டுருக்கின்றனோ...
அப்போதெல்லாம் கண்டுக்கொண்டு
உன் நினைவுகளை எப்படி என்னுள்
கடத்துக்கிறாய்...?

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

6/3/19

சற்றே இளைப்பாற

இளைப்பாற
ஆயிரம் மரங்கள்
இருந்தாப் போதும்!..
இறங்காமல்  - நீளுமோ
நமது சிறகுகள்!!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா