30/3/20

பெண் ஒரு உன்னத படைப்பு

womens quotes


பெண் ஒரு உன்னத படைப்பு !அவள்

அகத்தில் அன்புடனும் ,

புறத்தில் பண்புடனும் ,

பெண்மைக்கு உண்மையுடனும் ,

பிரமிக்க வைக்கும் திறமையுடனும் ,

பொறுமைக்கு இலக்கணமாய் ,

புனிதத்திற்குப் பொருத்தமாய் ,

அடக்கம் அறிந்தவளாய் ,

அகங்காரம் தொலைத்தவளாய்,

அன்பிற்குப் பணிபவளாய் ,

பார் முழுதும் வலம் வருபவள் .

அவள் மேன்மை மறந்தார்க்கும் ,

பெண்மையினை எதிர்த்தார்க்கும் ,

அயர்ந்தவர்க்கும் அறிவுறுத்தி ,

பெண்மையில்லையேல் அகிலமில்லை என ,

அவள் பெருமைதனை நிலைநாட்டி ,

அவள் கொண்ட குறிக்கோளை மறவாது ,

தொடர்ந்து வாழ்வில் பயணித்து ,

அனைவரின் வாழ்வையும் உயர்த்திட ,

ஒன்றுபட்டு செயல்படும் அவள்

ஓர் உன்னத படைப்பே !  

-து.தீபா. எம்.ஏ, எம்ஃபில் , பி.எட்

Kavithai Competition


 

3 Please share your thoughts and suggestions!:

T.Deepa சொன்னது…

வணக்கம்.
என் கவிதையை தேர்ந்தெடுத்தமைக்கு
நன்றிகள் பல🙏🙏🙏
மகிழ்ச்சி
தமிழ் மகள். து.தீபா
எம்.ஏ,எம்ஃபில் ,பி.எட்

T.Deepa சொன்னது…

அருமை
நன்றி
மகிழ்ச்சி

SARANYARAJA சொன்னது…

VERY NICE KAVITHAI VAAZHUTHTHUKAL