14/10/24

கடவுளின் மருவுருவமே

 கடவுளின் மருவுருவமே! 

உன் அன்பின் வார்தைக்கு அகிலமே மயங்கும் ,

உன் வரம் நானில்லை என் வரம் நீ மட்டுமே,

 நான் அழும் போது.கண்ணீரை துடைக்கும் தோழியே!

நான் சுவாசிக்கும்  காற்றே அவள் தான் அம்மா.....

எட்டிப்பிடிக்கும் கனவுகள்

 என்னால் எதுவும் முடியும் என்ற ஊக்கச் சொல்லே

எட்டிப்பிடிக்கும் கனவுகள் "எட்டாத்தூரத்தில் இல்லை"

என்பதை உணர்த்தி என்றென்றும் நான் வெற்றி பெற

எப்போதும் எனக்குள் ஒலித்து என்னுடனே பயணித்து
 
எனது அடையாளமாய் என்னை உயர்த்தி தனித்துவமாக்கி
 
என் முயற்சியின் பலனாய் வெற்றி பெற வாய்ப்பளிக்கும்.

13/10/24

ஆசிரியை

 அம்மா சொல்வாள் நேர்த்தியாக உடை அணி என்று;

அப்பா சொல்வார் தொலைக்காட்சி பார்க்காதே என்று;

பாட்டி சொல்வாள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள் என்று;

தாத்தா சொல்வார் கைப்பேசி வேண்டாமே என்று;

சகோதரன் சொல்வான் புத்தகம் எடுத்துப் படி என்று;

ஆனால், அனைவரிடமும் நான் சொல்வேன்....

உங்களின் எல்லா முகமுமாக இருக்கும்

என் ஆசிரியை சொன்னால் மட்டுமே செய்வேன் என்று......

வாழ்க ஆசிரிய பெருமக்கள்! நன்றி

பெண்ணே

 பெண்ணே நீயோ மேகத்தைப் போன்றவள்

 நானோ வற்றிய நதியைப் போன்றவன்
 
நீ மனம் வைத்தால் என்னை காப்பாற்றலாம்

 ஆனால் நீ ஏனோ மறுக்கிறாய்.

7/10/24

புன்னகை

 உன்னால் ஆயிரம் பேரை கோபம் படுத்திவிடலாம்,

அந்த ஆயிரம் பேரையும் சிரிக்க வைத்தால் நீதான் மாமனிதன்.

2/10/24

மங்கிய நிலா

 மங்கிய நிலா மனிதரில்லா வீதிகள்

அசையா மரங்கள் துளிக் காற்றில் லாமல்

நனைந்த உடல் சொட்டு
 
அன்பில்லா மனிதர்களின் சொத்து

பேனா

 தலையில் கிரிடம் அணிந்த கர்வம்

தலைகுனிந்து எழுதும் போது இல்லையே!!!!

பட்டமோ பட்டையமோ ஏதும் இல்லை உனக்கு...

பட்டமும் பட்டமும் நியின்று இல்லை எனக்கு....

உலகை ஆளும் அரசனும் உன் உயிர் எழுத்துக்கு மயங்கிடுவான்

ஆயிரம் ஆயிரம் படைகளும் உன் ஆய்த எழுத்துக்கு அடிபணியுமே!!!