18/8/24

நிம்மதி

 மனிதனுக்கு தேவை நிம்மதி

அந்த நிம்மதியை தேடி அவன்

இல்லக்கிறான் அவனின் மதி

மதி இழந்த பிறகு அவன் அவனாகவும்

 இல்லை மனிதனாகவும் இல்லை.

உன் நினைவுகளுடன்

 உன்னுடன் சேர்ந்து ரசிக்க வேண்டிய மழையை!!!

நான் உன் நினைவுகளுடன் சேர்ந்து ரசித்தேன்!!!

கண்ணாடி

என் ஒளி அவள் மீது பட
 
வெட்கத்தில் கரைந்த என் முகம்
 
கரைந்த என் வெட்கத்தை
 
அவளின் கண்களில் பார்த்தேன்

மன அமைதி

 அமைதியான இடத்தில் ஆரவாரம் செய்யும் மனம் 

அமைதி களைந்த பின்னும் தொடர்கிறது 

நீயில்லா நேரம்

 நெற்றி வகிட்டில் பொட்டு வைக்காததற்கும்

மல்லி வேண்டாமென முல்லை சூடுவதற்கும்

மாலை வேளையில் ஓய்ந்து படுப்பதற்கும்

இட்டிலிக்கு எண்ணைப் பொடியை இணையாக்குவதற்கும்

தீண்டல் வேண்டாப் பொழுதுகளில் தள்ளியிருப்பதற்கும்

உனது அனுமதி தேவையெனில், நீயில்லா

 நேரத்தை கொண்டாடித்தான் தீர்ப்பேன்...

16/8/24

முதல் காதல்

 மீசை முளைப்பதற்குள் ஆசை முளைத்து
 
ஆழத்துளைத்து மூளை உறைந்து 
 
உடல் சிலிர்ந்து உள்ளம் போடும்
 
ஆர்ப்பாட்டத்திற்கு "முதல் காதல்" என்று பெயர்!!!!

தனிமையின் வெற்றி

 வெற்றியோ தோல்வியோ, எதையும் சமாளிக்கும்

மன உறுதியை தந்தது, என் தனிமை உலகம்!

தனிமையில் போராடுகிறேன், வெற்றி கிடைக்குமா என்று...

நான் வருந்தவில்லை ஏனென்றால்,

நான் தனிமையில் போராடுவதே,வெற்றி தான்!!!

மலர் தோட்டம்

 காற்றில் ஆடும் மலர்கள் விழிகளுக்கு

 பசுமை கொடுக்கும் ரோஜாகள்

உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும்

 பச்சை பசுமையான மரங்கள்

 இது வண்ண மலர் தோட்டம்

14/8/24

நிலா

 நிலா தங்கள்முகம் வெண்மை அது போல

 தங்கள் உள்ளமும் அப்படி தானே?

உங்கள் உள்ளம் பிரகாசமானது.

பெண் உள்ளம் குடும்பத்திற்கு 

வெளிச்சம் கொடுத்து மகிழ்ந்தாள், 

நீங்களோ உலகத்திற்கே வெளிச்சம்

கொடுத்து மகிழ்வித்தாய் நன்றி நிலா.நன்றி . 

செல் இன்றி அமையாது உலகு

தொலைபேசி தொல்லையால் தொலைந்து போனது மனம்

லேண்ட் லைன் மாறி செல்பேசியாய் செல்லமாய்

மூன்றாம் கையாய் ஆனது இன்று வீட்டு உறவுகளும்

அறைக்குள்ளே அடக்கமாய் அனாதையாக செல் உடன்

பக்கத்து வீடும் தூரமாய் வேறு நாட்டு முகமறியா மனிதன்

கையடக்க ஹாய் என வீட்டிற்குள்ளே விபரீதமானவனாய்

என் நண்பனாய் என்றென்றும் உன்னுடனாய்

உலகமே நீயாக... செல் இன்றி அமையாது உலகு.......

பள்ளிப் பருவம்

தீப்பெட்டிகள் ரெயில்பெட்டிகளாகவும்,

சோடா மூடிகள் சக்கரமாகவும்,

மாறியிருந்த நாட்கள் அது...

மனம் முழுக்க மகிழ்ச்சியம்,

முகத்தில் புன்னகையும்,

குடியேறிய நாட்கள் அது...

மரத்தடியே மைதானமாகவும்,

நொன்டியே பொழுதுபோக்காகவும்,

நிலைத்திருந்த நாட்கள் அது...

பள்ளிப் பருவம் காணல் நீரானதே,

கல்லூரி வாசலில் காலெடுத்து வைத்தவுடன்......... 


13/8/24

தேங்கிய மழைநீரில்

தேங்கிய மழைநீரில்

விளையாடிய குழந்தையின்

வீடு முழுவதும்

மீன்குஞ்சுகளின் பாதச்சுவடுகள்

இன்னிசை பாடும் வண்டுகள்

  இன்னிசை பாடும் வண்டுகள்!

 தேன் உறிஞ்சும் வனத்துப்பூச்சிகள்! 

பச்சை பசேலென செடி கொடிகள்! 

அழகை பூத்துக்குழுக்கும் பூக்கள்! 

விண்ணைதோடும் மலைகள்! 

வளரேந்து நிற்கும் மரங்கள்!

 துள்ளி குத்திக்கும் மீன்கள்!

இதுவே புண் அகை சிலிர்க்கும் இயர்க்கை !

நிழலாய் நான் வாழ்கிறேன்

என் கனவுக்குள் கனவாய் நீ இருக்கிறாய்

என் கண் விழிக்குள் பல படமாய் நீ தெரிகிறாய்

நிஜமாய் நீ இருந்தாலும்

நிழலாய் நான் வாழ்கிறேன் 
 

21/7/24

தாயின் பாசம்

தவமிருந்தாலும் கிடைக்க முடியாத பாசம் தாயின் பாசம்!

மனதில் கஷ்டம் இருந்தாலும் அன்பை வெளிக்காட்டும் பாசம் தாயின் பாசம்!

எந்த மனிதனும் பார்க்காத பாசம் தாயின் பாசம்!


நட்பே

எங்கோ பிறந்து ஓர் இடத்தில் சந்தித்து பழகி

இரத்த பந்தம்  இல்லாமல் உனக்காக நான் இருக்கிறேன்

என்று  சொல்லும்  ஒரு உறவு நட்பே.......

அடிக்கடி சண்டையிட்டு  பிரிந்தாலும்

ஒரு நிமிடம் கூட பேசாமல்

இருக்க முடியாது- உனக்கும் எனக்கும்.....

என் மனதில் நீங்கா....உன் மனதில் நான்......

என்றும் என்றென்றும்...... நட்பே.......

மழை பாட்டு

 சில்லுனு குளிர்காற்று வீசும்  நேரம் இது,

 சில்லுனு சாரல் மழை பெயும் நேரம் இது,

கும்முன்னு மணக்குது மண்வாசம்,

குயில் கூவுது கூவுது மரத்தொரம்,

தண்ணி ஓடுது மலை ஓரம்,

ஆறு நிறைஞ்சு ஓடுது கரை ஓரம்,

குழந்தைகள் சிரிக்குது மழை போல,

வானவில் தோன்றுது மாயம் போல,

சூர்யன் எட்டிப்பார்க்குது குழந்தை  

போல, சூர்யன் மின்னுது பொன் போல...

17/7/24

வறுமை

 பசிக்கையிலே விளியோரம் கண்ணீர்.

வழிகையிலே வாய்க்கு தண்ணீர்.

தீருமா? ஏழை மகன் தாகம்.

பெண் அவளே

 உன்னில் இருந்து வந்தவள் பெண்!

எல்லை இல்லாத ஆரம்பம் பெண்!

அன்பைக் கொடுப்பவளும் பெண்!

கண்டித்து தண்டிப்பவளும் பெண்!

வழிமுறைகளை வகுத்தவளும் பெண்!

உன்னை பாதை மாறாமல் வழி நடத்துபவளும் பெண்!

துயரங்களில் உனக்கு தோள் கொடுப்பவளும் பெண்!

உன் சிரிப்புக்கு காரணக்கர்த்தாவும் பெண்!

இவ்வுலகம் பல உருவில் அவளை அறியும்

காதல்வயம் கொண்டு அவளிடம் மயங்கும்

பல அடக்குமுறைகளை அவள்மீது சுமத்தும்

சில சமயம், அரசியலும் பேசும்.

போற்றினாலும் தூற்றினாலும் வாழ்த்துபவள் பெண்!

பார்வை பல கோணங்களாயினும்

பிம்பம் ஒன்று- பெண் அவளே!



14/7/24

பெண்மையின் ‌பேரழகு

 அவள் பெண்மையின் ‌பேரழகு

என்னைப் பெற்றெடுத்த ஓர் அழகு

பதுசாய்  என்னை வளர்த்திட,

அவள் நெய்தால் ஒரு பஞ்சு மெத்தை

ஆனால் அவள் உறங்கியதோ ஒரு ஓலைப்பாய் ,

ஈரத்துணி இறுக கட்டி அவள் வயிறு பசியாறி,

ஈச்சம் பழம் இலந்தைப்பழம் என்றெல்லாம் எனக்கு அளித்தாள்,

ராணி என அவளை வைக்க ஆசைப்பட்ட ஏழை குழந்தை,

அவள் போன வழியெல்லாம் மலர் தூவி ஏங்கி நின்றேன்.......