25/1/17

ஊமை காதல்!

sad kavithaigal about life

குழந்தையை இழந்த தாய் போல
உன்னை இழந்து தவிக்கிறேன்...
ஒவ்வொரு நொடியும்...
எனது அழுக்குரல்!
உனக்கு எப்போது கேக்காது...
ஏன் என்றால்?
ஊமையாகி போன
உண்மையானது காதல் எனது...

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

24/1/17

மறக்க இயலவில்லை!

love sad feel kavithai tamil

காதலில் போராட்டம்...
கண்களில் தெரியுதடி...
கண்ணீரில் இமை முடி...
உன் உருவம் மறையுதடி...
மறைத்து வைத்து பார்த்தேன்...
மறுபடியும் தெரியுதடி...
மனதில் உள்ள காதலை...
மடி ஏந்தி தந்தபடி...

மறு வாழ்வு பூத்தது - உனக்கு
மனபந்தல் கல்யாணத்தில்...
மறக்க இயலவில்லை...
மரண போராட்டத்தில்...
உடல் பிரித்த ஆவிகூட...
உன்னையே சுற்றுமடி...
உனக்கு பிடித்தல் மட்டுமே
மறுபிறவி எனக்கிடி...

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

23/1/17

அன்னை, தந்தை!

about jallikattu in tamil

மண்டிட்டு பசி என்றால்?
தன் மடிதரும் என் தாய் இவள் (பசு)! 

பால் தருபவள் நம் அன்னை என்றால்?
நீயும் எங்களது அன்னை தானே!
என் அன்னையும், மண்ணையும் விட்டுத்தர மனம் இல்லை!

- தினேஷ் குமார் எ பி

அன்புடன் காதலன்!

love kavithai with kiss tamil

உனது உதட்டில்...
ஒருவேளையாவது...
உணவு அருந்த வேண்டும்...
தினமும்!...

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

20/1/17

என் தம்பி (காளை)

jallikattu kavithai tamil

என் அன்னையை!
அம்மா என்று..
உலகம் கேக்கும் ஒலியில்
உரிமையுடன் கூப்பிடும்...
என் தம்பி இவன் (காளை)!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

19/1/17

தந்தை தழுவுதல்!

சீவிய கொம்புகளில்..
சிறிய உதிரத்தில்...
போட்டு இட்டு...
எங்கள் உணர்வுகளை தழுவுகிறோம்...
என் தந்தையிடம்!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

அன்னை நீ!

 

என் இனத்தை சுமந்து !
பால் தந்த அன்னை நீ!
இப்போது உன்னை இழந்து விட்டால்!
நாங்கள் தான்!
எப்போதும் அனாதைகள்!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

17/1/17

தூசி இல்லை காதல்

உன்னை காணாமல் இருக்க!!!...
காற்றில் தூசியாகிறேன்!!!..
நீ நின்ற இடமெல்லாம்!!!...

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

3/1/17

இதழில் அன்பு!

Kiss Tamil kadhal Kavidhaigal

நீ ஆயிரம் முறை சொல்லியும் புரியதா காதல்!...
அரை நொடியில் சொல்லியது உனது முத்தம்!!!...

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

30/12/16

நலம் அறிய ஆவல்!

உன்னை நேசித்துவிட்டு...
விலகி போனவர்கள்!..
யாராக இருந்தாலும்!!!
நீண்ட நாள் கழித்து பார்த்த போது...
நாம் கேட்டுக்கும் முதல் கேள்வி
நீ எப்படி இருக்க?

- தினேஷ் குமார் எ பி

28/12/16

பூவின் இதழ் சிவப்பு!

பூவின் இதழ் சிவப்பு!

காலையில் ஆயிரம்!!!
மலர்கள் மலர்ந்தாலும்...
உன் இதழ் புன்னகையே!!!
என் நினைவில் மலர்கின்றன!..
தினம் தினம்!!!..

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

2/12/16

வாழ்க்கை!

life tamil kavithai tamil
ஒரு நாள் வாழப்போகிறோம் என்று
தெரிந்த பின்பும்,
அழகாய் சிரித்து மடிகிறது
இந்த பூக்கள் !
நுறு வருடம் வாழும்
நாம் ஏன் சந்தோஷத்தை
தேடும் பிச்சைக்காரர்களாக!
ஆகிறோம் எப்போதும்?

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

30/11/16

நிலவு பெண்ணானது!

vennila kavithaigal in tamil

யாரிடமும் சொல்லாமல்,
பூமியில் பெண்ணானது - நிலவு!

அவள் கண்விழித்து பார்த்தால்
பௌர்ணமி !

கண்களை சிமிட்டி பார்த்தால் !
வளர்பிறை !

நான் இப்பொழுது ஆகிறேன் !
உன்னால் தேய்பிறை !

நீ போதும் என்று சொல்லு !
ஒரு முறை !

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா


15/11/16

கரையும் பனி!

beautiful tamil kadhal kavithaigal
உன்னை பார்த்தபின்பு
ஓவ்வொரு பூக்களின் கர்வமும்,
காணாமல் போகின்றன…
கீழே விழும் - பனித்துளியில் !

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

14/11/16

பகலில் தோன்றாத நிலவு!

nilavu kavithai tamil
நீ இரவில் மட்டுமே
உன் முகம் காட்டுகிறாய்!
இப்பொழுது புரிந்தது
ஏன் இரவில் மட்டும்
நிலவு வருவதென்று !

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

11/11/16

ஒற்றை கால் நடனம்!

roja tamil kavithai

ரோஜாக்களே அசைந்து - அசைந்து
ஒற்றை காலுடன்
நடனம் எதற்கு?
அது சொன்னது !
உன் அன்னத்தின்
தலையில் சூடிக்கொள்ள என்று !!!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

9/11/16

மேக முத்தங்கள்!

உன் உதட்டின் மேலே
மூச்சுக்காற்று பட்டதும்...
தூவுமோ...என்
இதழினிலே
சில முத்தங்கள் !!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

1/11/16

தாமரை முகம்!

Thamarai kadhal kavithai
சிவப்பு
கம்பளத்தில்
தாமரை முகம் !
என்னவள் !

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

17/9/16

ஓவியம்!

இந்த ஓவியத்திற்கு எப்படி
என்னை பிடித்துப்போனதென்று
தெரியவில்லை ?
துரிகையாக நான்
உன்னுள் கலந்திட காத்திருக்கிறேன் !!
 
     - கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

30/8/16

கண்னே கண்ணுறங்கு!

amma kavithai in tamil

பாடல் முடிந்த பிறகும்

திரும்ப திரும்ப கேட்கத்தோன்றும் !

வரிகள் தான் நம் அன்னை சொல்லும்

அரிராராரோ !!!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா