25/1/17
24/1/17
மறக்க இயலவில்லை!
காதலில் போராட்டம்...
கண்களில் தெரியுதடி...
கண்ணீரில் இமை முடி...
உன் உருவம் மறையுதடி...
மறைத்து வைத்து பார்த்தேன்...
மறுபடியும் தெரியுதடி...
மனதில் உள்ள காதலை...
மடி ஏந்தி தந்தபடி...
மறு வாழ்வு பூத்தது - உனக்கு
மனபந்தல் கல்யாணத்தில்...
மறக்க இயலவில்லை...
மரண போராட்டத்தில்...
உடல் பிரித்த ஆவிகூட...
உன்னையே சுற்றுமடி...
உனக்கு பிடித்தல் மட்டுமே
மறுபிறவி எனக்கிடி...
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
23/1/17
அன்னை, தந்தை!
மண்டிட்டு பசி என்றால்?
தன் மடிதரும் என் தாய் இவள் (பசு)!
பால் தருபவள் நம் அன்னை என்றால்?
நீயும் எங்களது அன்னை தானே!
என் அன்னையும், மண்ணையும் விட்டுத்தர மனம் இல்லை!
- தினேஷ் குமார் எ பி
20/1/17
என் தம்பி (காளை)
19/1/17
தந்தை தழுவுதல்!
சீவிய கொம்புகளில்..
சிறிய உதிரத்தில்...
போட்டு இட்டு...
எங்கள் உணர்வுகளை தழுவுகிறோம்...
என் தந்தையிடம்!
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
அன்னை நீ!
என் இனத்தை சுமந்து !
பால் தந்த அன்னை நீ!
இப்போது உன்னை இழந்து விட்டால்!
நாங்கள் தான்!
எப்போதும் அனாதைகள்!
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
17/1/17
தூசி இல்லை காதல்
உன்னை காணாமல் இருக்க!!!...
காற்றில் தூசியாகிறேன்!!!..
நீ நின்ற இடமெல்லாம்!!!...
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
3/1/17
இதழில் அன்பு!
நீ ஆயிரம் முறை சொல்லியும் புரியதா காதல்!...
அரை நொடியில் சொல்லியது உனது முத்தம்!!!...
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
30/12/16
நலம் அறிய ஆவல்!
உன்னை நேசித்துவிட்டு...
விலகி போனவர்கள்!..
யாராக இருந்தாலும்!!!
நீண்ட நாள் கழித்து பார்த்த போது...
நாம் கேட்டுக்கும் முதல் கேள்வி
நீ எப்படி இருக்க?
- தினேஷ் குமார் எ பி
28/12/16
பூவின் இதழ் சிவப்பு!
காலையில் ஆயிரம்!!!
மலர்கள் மலர்ந்தாலும்...
உன் இதழ் புன்னகையே!!!
என் நினைவில் மலர்கின்றன!..
தினம் தினம்!!!..
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
2/12/16
வாழ்க்கை!
ஒரு நாள் வாழப்போகிறோம் என்று
தெரிந்த பின்பும்,
அழகாய் சிரித்து மடிகிறது
இந்த பூக்கள் !
நுறு வருடம் வாழும்
நாம் ஏன் சந்தோஷத்தை
தேடும் பிச்சைக்காரர்களாக!
ஆகிறோம் எப்போதும்?
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
30/11/16
நிலவு பெண்ணானது!
யாரிடமும் சொல்லாமல்,
பூமியில் பெண்ணானது - நிலவு!
அவள் கண்விழித்து பார்த்தால்
பௌர்ணமி !
கண்களை சிமிட்டி பார்த்தால் !
வளர்பிறை !
நான் இப்பொழுது ஆகிறேன் !
உன்னால் தேய்பிறை !
நீ போதும் என்று சொல்லு !
ஒரு முறை !
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
15/11/16
கரையும் பனி!
உன்னை பார்த்தபின்பு
ஓவ்வொரு பூக்களின் கர்வமும்,
காணாமல் போகின்றன…
கீழே விழும் - பனித்துளியில் !
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
14/11/16
பகலில் தோன்றாத நிலவு!
நீ இரவில் மட்டுமே
உன் முகம் காட்டுகிறாய்!
இப்பொழுது புரிந்தது
ஏன் இரவில் மட்டும்
நிலவு வருவதென்று !
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
11/11/16
ஒற்றை கால் நடனம்!
ரோஜாக்களே அசைந்து - அசைந்து
ஒற்றை காலுடன்
நடனம் எதற்கு?
அது சொன்னது !
உன் அன்னத்தின்
தலையில் சூடிக்கொள்ள என்று !!!
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
9/11/16
மேக முத்தங்கள்!
உன் உதட்டின் மேலே
மூச்சுக்காற்று பட்டதும்...
தூவுமோ...என்
இதழினிலே
சில முத்தங்கள் !!
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
1/11/16
17/9/16
ஓவியம்!
இந்த ஓவியத்திற்கு எப்படி
என்னை பிடித்துப்போனதென்று
தெரியவில்லை ?
துரிகையாக நான்
உன்னுள் கலந்திட காத்திருக்கிறேன் !!

























