18/8/24
பாசத்தை கொடுத்த கடவுளே அப்பா
அன்று போல் இன்று இல்லை
அன்று போல் இன்று இல்லை என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது...
ஒவ்வொரு முறையும் உனை பார்க்கும்போதும்
ஆசையுடன் சுவாசித்த கணம் இன்று இல்லை...
நாட்கள் நகர நகர ஏதோ மாற்றம் இயல்பா...???
இல்லை என் எண்ணமா....எதுவும் புரியவில்லை.
வெட்ட வெளியில் யாருமே தீண்டா வண்ணம் உனை காத்தேனே...
மழை கொட்டும் முன்பே மார்போடு அணைத்து உனை பார்த்தேனே...
நீ இல்லா இடத்தில் எனக்கில்லை நீராகாரம்..
நீ தந்த சுகம் நீளுமே நாள்தோறும்...
பலகாலம் வாழ்வாய் என நினைத்தேனே..
நமக்குள் பாதியிலே புளித்தது ஏனோ காதலாங்க..........!!!!???
அட அம்மா செஞ்ச மாங்கா ஊருகாய்ங்க வர வர ரொம்ப புளிகிது.....!!!
அர்த்தம்
தொட்டதை விட பட்டதே அதிகம்
சந்தோசமாய் இருந்த ஓரிரு நிமிடங்களை விட
சண்டை போட்ட மணிகளே அதிகம்.
ஆதரவை விட அவமானப்பட்டதே அதிகம்.
துணைவன் என்பதை விட
துரோகி என்பதே பொருத்தம்.
சகிப்பு என்பதை விட
சமுக பொறுப்பு என்பதே அர்த்தம்.





