27/6/24

என் குடும்பம்

நான் மற்ற வர்களிடத்தில் தூக்கி 

         எறியப் படும் போது

என் குடும்பம் சொன்னது உனக்காக

          நான் இருக்கிறேன் என்றது!


26/6/24

உன்னைப் பார்த்ததும்

உன்னைப் பார்த்ததும் ஏனோ என்

          உதடுகள் மட்டும் சிரிக்காமல்

என் கண்களும் சேர்த்து சிரித்து

          விடுகின்றன உன்னால் வெட்கத்தில்!

25/6/24

உன்நினைவுகளில் நான்

 உன் இடையைப் பார்த்துநான் காதலித்திருந்தால்

            என்றோஉன்னை மறந்திருப்பேன் நான்!

ஆனால் உன்இதயத்தை காதலித்தாலோ என்னவோ

             என்றும் உன்நினைவுகளில் நான்!

24/6/24

ஒருதலைக் காதல்

 நீ ஒரு முறைமட்டும் என்னைத்

திரும்பிப் பாரடி பெண்ணே!

என் ஆயுள்வரை அந்தப் பார்வை

 மட்டுமே போதுமடி கண்ணே!

23/6/24

ஒரு உறவு கிடைத்துவிட்டால் போதும்

 கட்டி அணைக்க, தட்டிக் கொடுக்க, செல்லச் சண்டைகள் ஈட,

சண்டைக்குபின் வரும் மௌனத்தை கலைக்க,

செல்ல பெயர்கள் சொல்லி அழைக்க,

கெஞ்ச கொஞ்ச, பாசம் வைக்க, நேசம் வைக்க,

கீழே விழும் போது கைக் கொடுக்க,

கதறி அழும் போது தோள் கொடுக்க,

வெற்றி பெறும்போது அதைப்பார்த்து சிரிக்க ரசிக்க,

சொல்லாமல் நமக்காக பிரார்த்தனை செய்ய,

எதிர்பாராமல் நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற,

பாராட்ட சீராட்ட, தலை கொதி விளையாட, மொத்தத்தில்

உள்ளமாக உணர்வாக உதிரமாக  உயிராக இருக்கும் 

ஒரு உறவு கிடைத்துவிட்டால் போதும்,

வாழ்வின் அர்த்தம் புரிந்து விடும்,

வாழ்வே அழகாய் மாறி விடும்!!!


எட்டு மடிப்பு சேலை

  நீ எட்டாமல் கட்டிய எட்டு மடிப்பு சேலை

 உந்தன் அழகை என்னிடம் சொல்லாமல்

 சொல்லி கொள்ளாமல் கொள்ளுதடி.

19/6/24

என் உயிர்

 உன்னை பார்க்க நினைத்தேன் பார்த்தேன்

உன்னிடம் பேச நினைத்தேன்

சில நிமிடம் பேசினேன்

உன் கை பிடிக்க நினைத்தேன் 

ஆனால் நீ என்னை விட்டு விலகிவிட்டாய்

நீ வேண்டுமானால் விலகிவிடலாம்

நான் விலகமாட்டேன்

என்றும் உன்னுடனே என் உயிர் 💖💖

16/6/24

அன்பு மதம்

அன்பெனும் மதத்தை ஆளும்
      ஆண்டவன் ஒருவன் ஆகும்.

அன்பையே மதமாய்க் கொண்டு
      அனைவரும் வாழ்வோமென்றால்,

இன்பமே பூக்கும் மக்கள்
       இனியநல் வாழ்வு தன்னில்.

அன்பினைத் தானே மதங்கள்
      அனைத்துமே உரத்துச்சொல்லும்.!

ஆதியில் இல்லை சாதி
          அப்போது இல்லை மதங்கள்

பாதியில் வந்த தன்றோ
          பாழ்போன சாதி மதங்கள்.

சாதியும் மதமும் தானே
          சமுதாய அமைப்பில் தீயை

ஊதியே பெருக்கி நமது
          ஒற்றுமை அழித்த தம்மா!

மனிதனை, மனிதா நேசி!
        மறந்திடு மற்ற தெல்லாம்.

புனிதமிகு வேத மெல்லாம்
         புகன்றிடும் அன்பை மதமாய்

இனிவரும் நாளில் ஏற்பாம்
         ஈடுகள் அன்பிற் கில்லை.

மனிதனே! அன்பு வாழ்வு
          மணக்கட்டும் பாரி லெங்கும்.!
                          

காதல் உறவு

 உயரிய அன்பில் உருவான உணர்வு
 
உலகில் கிடைக்கும் காதல் உறவு

ஒரு முறை வாழ்க்கையில் பல முறை மனதில் 

பாய்ந்து ஓடும் நதியாய் படர்ந்து வளர்ந்து வருமே

சில முறை சிறந்து சினம் சிறிது மறந்து 

சிந்தனைக்குள் புகுந்து விளையாடுமே

உடனடி முடிவு உடலுக்கு கேடு 

உறுதியாக இருந்து உயரம் பறந்து

உரிய நேரத்தில் உண்மை உணர்த்தி 

உறவை வலுப்படுத்தி வளமாக்குவோம்... 

16/5/24

உன்னால் பெண்ணே

 கண்கள் இருப்பது உன்னை கணத்தானோ..!!

இதழ்கள் இருப்பது உன்னிடம் பேசதனோ..!!

இதயம் இருப்பது உன்னை நேசிக்கதானோ..!! 

என்றிந்தேன்.!!!! ஆனால் உன்னை நெருங்கிய

தருணம் கண்கள் வெக்கபடுகிறது..!!

இதழ்கள் பேச முடியாமல் திக்கி தவிக்கிறது..!!

இதயம் துடிப்பதை மறந்து நின்றுவிட்டது..!!

 ஏனோ உன்னால் பெண்ணே..

என் வாழ்க்கை பாதையில்

உன்னிடம் பேசவும் தேவையில்லை...
 
பழகவும் தேவையில்லை..

உன்னை பார்த்தால் மட்டுமே போதும்..!!! 

சாட்டிங்கும் தேவையில்லை.. 

டேட்டிங்கும் தேவையில்லை..

உன்னுடைய ஞாபகம் மட்டுமே போதும்..!!!

நீ செல்லும் பாதையில் பின்தொடர தேவையில்லை..

என் வாழ்க்கை பாதையில் உன்னை

கூட்டிச் சென்றாலே போதும்..!!!

இனி‌ காத்திருக்கவும் காலம் இல்லை..

காதலிக்கிறேன் உன்னை..!!

ஏற்றுக்கொள் என்னை காதலனாக🖤🖤

15/5/24

நிலா

 தொடமுடியாத தொலைவில் உள்ள உன்னை தொலைவிலாவது

 பார்த்திட வேண்டியே பகல் முழுவதும் காத்திருக்கிறேன்...

இருளின் தொலைதூரத்தில் உன்னை பார்த்த 

கணம் என்னையே துளைத்துவிடுகிறேன்...

2/5/24

கடவுள் வடிவில்

 கடவுள் வடிவில் கருணை கொடுத்தாய்,

கருப்பையில் சுமந்து பெற்றாய்,

உன் கரம் பிடித்து உலகம் சுற்ற,

வஞ்சகம் நிறைந்த இவ்வுலகில்,

நல்லன்பு மட்டும் என்னிடம் கொடுத்தாய்,

பல வலிகள் கொண்டு உழைத்து,

உன்கரமோ காய்த்து போக,

என் பிஞ்சு கரத்தை மெருகூட்டினாய்,

உன் மனம் உடைத்து, என் மனம் படைத்தாய்,

உன் காலடி அடைய நான் என்ன செய்வேன்,

உன் வாழ்வை அடைய,

என் கண கொடிகளும் ஏங்க,

பல வழி உண்டு என்றாலும்,

எவ்வழியும் தொற்றுபோகும்,

உன் அன்பின் முன்னே,

கருணை வடிவ கடவுளின் முன்னே...❣️


ஜாதியை வெல்ல

 கண் பார்வையில் அன்பைக் கொண்டு

விண்ணுலகில் இடியாய் வந்தாய்

நீர் என்னும் மழையை தந்தாய்

ரோஜாக்கள் பூக்க - அதில்

ஆயிரம் முட்கள் உன்னை காக்க

ஜாதியை வெல்ல ஜோதியாய் வந்தாயடா

28/4/24

விழியில் சிறை வைப்பாயா

 கார்தூவும் நேரம் வந்த காற்றாய் 

என்னை சிலிர்க்க செய்தவளே

அலைபோல அழியாத உன் நினைவாலே 

நிலையின்றி தடுமாறி தவிக்கின்றேன்

நீ சொல்லி சென்ற நாள் வரவில்லையென்றலும்

உன்னை அல்லி அனைக்கும் அசையிலே வருகிறேன்

முடியாதென சொல்லி முகத்தை மட்டும் மறைக்காதே

அது நீ நினைத்தாலும் நடவாது

கதிரவனை கருமுகில் மறைத்தாலும் 

அதன் கீற்றொளி பாய்வதுபோல், 

உன் பவளமேனி பிரகாசிக்கும். 

ஒருமுறை உன் செவ்விதழ் மலர, 

என் கரத்தினுல் உன் கரம்பதிய தோள்சாய்ந்தால், 

காயம் மறைந்து காத்திருப்பேன், 

காலமெல்லாம் விழி பூத்திருப்பேன். 

உன் கயல்விழி காணாமல் கரையும்

என்னை காக்க கருனை செய்வாயா? 

தென்றலோடு வருகிறேன் பூவே, 

தேன் விருந்து தருவாயா?!

விழியில் சிறை வைப்பாயா?! 


காதல் வந்துவிட்டது என என்னவேண்டாம்

உள்ளத்தில் இருக்கும் உதடுகள் மறைக்கும்!

விழிகள் ஏங்கும் பார்வையோ தயங்கும்!

மௌனம் தான் பேசும் கவிதைகள் பாடும்!

விரல்களோ இசைக்கும் வீனை போல நினைக்கும்!

உலகமே அதிரும் செவிகள் அதை இரசிக்கும்!

காதல் வந்துவிட்டது என என்னவேண்டாம்,

கொரனாவந்து தணிமைப்படுத்தபட்டவர்!






 

விலகும் முன் யோசி

 விலகும் முன் யோசி விலகியபின் யோசிக்காதே ஏனென்றால்
 
நீ தேவை என்று அவர் நினைத்திருந்தால்

நீ யோசிப்பதற்கு முன்னரே உன்னை தேடி வந்து இருப்பார்

மனதில் விழும் துளிகள்

 உன் வார்த்தைகள் என் மனதில்
 
விழும் துளிகள் அந்த துளிகளை வைத்து

மனதில் ஓவியம் வரைந்தேன் எதிர்காலத்தை

27/4/24

Kaalangkal Mudintha Pinpee

 காலங்கள் முடிந்த பின்பே கவிதைகள் வேண்டுமென்றால்....!

எழுத மனமில்லை, இருந்தும் எதிர்க்கத் துணிவில்லை...!!

யாரும் எழுதா கவிதையை எழுத எண்ணினேன்...!

வலிகளோடு சிறந்த வரிகளையும் தேடினேன்...!!

பிறகுதான் உணர்ந்தேன் என்னவளே என்னுடன் இல்லாதபோது ...!

அவளுக்கான வரிகள் மட்டும் இருக்குமா என்ன..??

முறிந்தது காதல்..! புரிந்தது உலகம்..!!

தொடர்ந்தது கண்ணீர்..! முடிந்தது கவிதை...!!

உடன்பிறா தங்கை

உடன்பிறா தங்கை உறவிலும்

துன்பத்திலும் துணையாக இருப்பதிலும்

இன்பத்தில் சிரிக்கும் மழலையாகவும்

வலிக்கு உற்ற மருந்தாகவும்

கிடைத்த முதல் வரமாகவும்

என் வாழ்வில் நீ தோன்றினாய்!