28/4/24

விழியில் சிறை வைப்பாயா

 கார்தூவும் நேரம் வந்த காற்றாய் 

என்னை சிலிர்க்க செய்தவளே

அலைபோல அழியாத உன் நினைவாலே 

நிலையின்றி தடுமாறி தவிக்கின்றேன்

நீ சொல்லி சென்ற நாள் வரவில்லையென்றலும்

உன்னை அல்லி அனைக்கும் அசையிலே வருகிறேன்

முடியாதென சொல்லி முகத்தை மட்டும் மறைக்காதே

அது நீ நினைத்தாலும் நடவாது

கதிரவனை கருமுகில் மறைத்தாலும் 

அதன் கீற்றொளி பாய்வதுபோல், 

உன் பவளமேனி பிரகாசிக்கும். 

ஒருமுறை உன் செவ்விதழ் மலர, 

என் கரத்தினுல் உன் கரம்பதிய தோள்சாய்ந்தால், 

காயம் மறைந்து காத்திருப்பேன், 

காலமெல்லாம் விழி பூத்திருப்பேன். 

உன் கயல்விழி காணாமல் கரையும்

என்னை காக்க கருனை செய்வாயா? 

தென்றலோடு வருகிறேன் பூவே, 

தேன் விருந்து தருவாயா?!

விழியில் சிறை வைப்பாயா?! 


0 Please share your thoughts and suggestions!: