16/6/24

அன்பு மதம்

அன்பெனும் மதத்தை ஆளும்
      ஆண்டவன் ஒருவன் ஆகும்.

அன்பையே மதமாய்க் கொண்டு
      அனைவரும் வாழ்வோமென்றால்,

இன்பமே பூக்கும் மக்கள்
       இனியநல் வாழ்வு தன்னில்.

அன்பினைத் தானே மதங்கள்
      அனைத்துமே உரத்துச்சொல்லும்.!

ஆதியில் இல்லை சாதி
          அப்போது இல்லை மதங்கள்

பாதியில் வந்த தன்றோ
          பாழ்போன சாதி மதங்கள்.

சாதியும் மதமும் தானே
          சமுதாய அமைப்பில் தீயை

ஊதியே பெருக்கி நமது
          ஒற்றுமை அழித்த தம்மா!

மனிதனை, மனிதா நேசி!
        மறந்திடு மற்ற தெல்லாம்.

புனிதமிகு வேத மெல்லாம்
         புகன்றிடும் அன்பை மதமாய்

இனிவரும் நாளில் ஏற்பாம்
         ஈடுகள் அன்பிற் கில்லை.

மனிதனே! அன்பு வாழ்வு
          மணக்கட்டும் பாரி லெங்கும்.!
                          

0 Please share your thoughts and suggestions!: