30/6/24

உறவா உயிரா

 அம்மா என் உறவா, உயிரா?

இன்னும் நான் அறியவில்லை,

இவளை தாண்டும் ஒரு அன்பை!!

இன்னும் நான் நினைக்கவில்லை,

இவளை விடவும் வேறன்பை!!

என் வானம் இருண்டாலும்,

எனது கண்ணில் ஒளியாவாள்!!

எவர் விட்டுப்போனாலும்,

என்னை பெற்ற கடமை விட்டுக்கொடுக்காது பேசிடும்!!

காரணம் இன்றி தாங்கின உறவு,

காலங்கள் கடந்தாலும் என்றும் போதும்

இவள் சேய் என்ற ஓர் உணர்வு!!




29/6/24

நம் உணர்வுகள்

உறவுகள் நெறுங்கிய போது வெறுக்கின்றாய்....! 

விலகிய பிறகு நேசிக்கின்றான்....! 

எதை நோக்கி பயணிக்கின்றது நம் வாழ்வு....! 

உறவுகள் என்பது கடையில் வாங்கும் பொருளல்ல.....! 

அது நம் உணர்வுகள்....!  

28/6/24

சாரல் மழையில்

சாரல் மழையில் நனையாமல் இருக்க
 
உன் குடையினுள் நுழைந்த எனக்கு
 
காதல் மழையில் நனையாமல்

இருக்க முடியவில்லை ... 

27/6/24

என் குடும்பம்

நான் மற்ற வர்களிடத்தில் தூக்கி 

         எறியப் படும் போது

என் குடும்பம் சொன்னது உனக்காக

          நான் இருக்கிறேன் என்றது!


26/6/24

உன்னைப் பார்த்ததும்

உன்னைப் பார்த்ததும் ஏனோ என்

          உதடுகள் மட்டும் சிரிக்காமல்

என் கண்களும் சேர்த்து சிரித்து

          விடுகின்றன உன்னால் வெட்கத்தில்!

25/6/24

உன்நினைவுகளில் நான்

 உன் இடையைப் பார்த்துநான் காதலித்திருந்தால்

            என்றோஉன்னை மறந்திருப்பேன் நான்!

ஆனால் உன்இதயத்தை காதலித்தாலோ என்னவோ

             என்றும் உன்நினைவுகளில் நான்!

24/6/24

ஒருதலைக் காதல்

 நீ ஒரு முறைமட்டும் என்னைத்

திரும்பிப் பாரடி பெண்ணே!

என் ஆயுள்வரை அந்தப் பார்வை

 மட்டுமே போதுமடி கண்ணே!

23/6/24

ஒரு உறவு கிடைத்துவிட்டால் போதும்

 கட்டி அணைக்க, தட்டிக் கொடுக்க, செல்லச் சண்டைகள் ஈட,

சண்டைக்குபின் வரும் மௌனத்தை கலைக்க,

செல்ல பெயர்கள் சொல்லி அழைக்க,

கெஞ்ச கொஞ்ச, பாசம் வைக்க, நேசம் வைக்க,

கீழே விழும் போது கைக் கொடுக்க,

கதறி அழும் போது தோள் கொடுக்க,

வெற்றி பெறும்போது அதைப்பார்த்து சிரிக்க ரசிக்க,

சொல்லாமல் நமக்காக பிரார்த்தனை செய்ய,

எதிர்பாராமல் நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற,

பாராட்ட சீராட்ட, தலை கொதி விளையாட, மொத்தத்தில்

உள்ளமாக உணர்வாக உதிரமாக  உயிராக இருக்கும் 

ஒரு உறவு கிடைத்துவிட்டால் போதும்,

வாழ்வின் அர்த்தம் புரிந்து விடும்,

வாழ்வே அழகாய் மாறி விடும்!!!


எட்டு மடிப்பு சேலை

  நீ எட்டாமல் கட்டிய எட்டு மடிப்பு சேலை

 உந்தன் அழகை என்னிடம் சொல்லாமல்

 சொல்லி கொள்ளாமல் கொள்ளுதடி.

19/6/24

என் உயிர்

 உன்னை பார்க்க நினைத்தேன் பார்த்தேன்

உன்னிடம் பேச நினைத்தேன்

சில நிமிடம் பேசினேன்

உன் கை பிடிக்க நினைத்தேன் 

ஆனால் நீ என்னை விட்டு விலகிவிட்டாய்

நீ வேண்டுமானால் விலகிவிடலாம்

நான் விலகமாட்டேன்

என்றும் உன்னுடனே என் உயிர் 💖💖

16/6/24

அன்பு மதம்

அன்பெனும் மதத்தை ஆளும்
      ஆண்டவன் ஒருவன் ஆகும்.

அன்பையே மதமாய்க் கொண்டு
      அனைவரும் வாழ்வோமென்றால்,

இன்பமே பூக்கும் மக்கள்
       இனியநல் வாழ்வு தன்னில்.

அன்பினைத் தானே மதங்கள்
      அனைத்துமே உரத்துச்சொல்லும்.!

ஆதியில் இல்லை சாதி
          அப்போது இல்லை மதங்கள்

பாதியில் வந்த தன்றோ
          பாழ்போன சாதி மதங்கள்.

சாதியும் மதமும் தானே
          சமுதாய அமைப்பில் தீயை

ஊதியே பெருக்கி நமது
          ஒற்றுமை அழித்த தம்மா!

மனிதனை, மனிதா நேசி!
        மறந்திடு மற்ற தெல்லாம்.

புனிதமிகு வேத மெல்லாம்
         புகன்றிடும் அன்பை மதமாய்

இனிவரும் நாளில் ஏற்பாம்
         ஈடுகள் அன்பிற் கில்லை.

மனிதனே! அன்பு வாழ்வு
          மணக்கட்டும் பாரி லெங்கும்.!
                          

காதல் உறவு

 உயரிய அன்பில் உருவான உணர்வு
 
உலகில் கிடைக்கும் காதல் உறவு

ஒரு முறை வாழ்க்கையில் பல முறை மனதில் 

பாய்ந்து ஓடும் நதியாய் படர்ந்து வளர்ந்து வருமே

சில முறை சிறந்து சினம் சிறிது மறந்து 

சிந்தனைக்குள் புகுந்து விளையாடுமே

உடனடி முடிவு உடலுக்கு கேடு 

உறுதியாக இருந்து உயரம் பறந்து

உரிய நேரத்தில் உண்மை உணர்த்தி 

உறவை வலுப்படுத்தி வளமாக்குவோம்...