12/10/15
11/9/15
காதலி ஒரு குழந்தை!
உன்னை நினைத்து உறங்காத நாளில்
எனது - கனவுகளின் வழியாக...
எட்டி உதைக்கிறாய் ஒரு குழந்தையைப்போல்!
14/8/15
இந்தியன் என்ற பெருமை எனக்கும் உண்டு!
அகிம்சை என்னும் தோட்டத்தில்
சுதந்திரம் என்னும் பூக்கள் பூக்க
மண்ணாகி போனிர்களோ
இத்தோட்டத்தினை {தேசம்} காக்க...
என் நாட்டு தியாகிகளே!
- தினேஷ் குமார் எ பி
31/7/15
அக்னி சிறகுகள்
உன் சரிதம்: இம்மண்ணுலகில் சென்றாலும்...
உன் புகழ் விண்ணுலகம் பாடும்!
விதை ஒன்று புதைந்தது இன்று...
நாளை வெளி வரும் பல இளம் கன்று!
- தினேஷ் குமார் எ பி
30/7/15
அது ஒரு அப்துல் கலாம் {கலாம்)
இம்மண்ணுலக காந்த சக்தியே...
மாணவர்களின் ஊந்து சக்தியே...
ஒரு கண்டுபிடிப்பின் தாய்? தேவை!
தேவைகள் அனைத்தும் தந்ததால்...
நீ தெய்வத்திடம் சென்றாயோ? என் தெய்வமே!
- தினேஷ் குமார் எ பி
4/7/15
15/6/15
விவசாயி இடம் விற்பனைக்கு
இம்மண்ணில் நெற்கதிர் நட்டேன்,
காய் ,கனிகளை பயிரிட்டேன்,
பருப்பு சாகுபடி செய்தேன்,
கம்பு, வேர்கடலை விளைவித்தேன்,
விற்கவில்லை!
ஆனால் கல் தான் நட்டேன்...
இடம் விற்பனைக்கு என
விற்றுவிட்டது!
இப்படிக்கு வருத்ததுடன் விவசாயி...
தினேஷ் குமார் எ பி
1. ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய்.2. ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3. ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4. ஒரு ஏக்கரை பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்
10/6/15
என் நண்பன்!
ஈவுலகில் நான் இருந்தாலும் இல்லை என்றாலும்
எனது தாய்க்கு இன்னொரு மகன் இருப்பன் அவன் என் நண்பன்!
தினேஷ் குமார் எ பி
28/5/15
கண்ணில் பட்ட கவிதை
கண்ணில் பட்டவை அனைத்தும் காட்சிபடுதுகிறேன்!
ஏன் கைபேசியின் வழியாக...
காட்சிப்படுதுவதை கவிதையாகின்றன.
ஏன் கற்பனை வழியாக...
என் கற்பனைகளை அனுப்பிவிட்டேன் கவிதையாக...
இதோ இணைத்துள்ளேன் எனது காதலை....
இணைய வழியாக...
தினேஷ் குமார் எ பி
30/4/15
கண்ணில் விழுந்தவன் என் காதலன்
நி பார்க்கும் பார்வையில் ஆயிரம்
கவிதை வீசி செல்கிறாய் என்மேல்!
உனது விழியின் வழியாக
அதிலிருந்து எடுத்துப்படித்தேன் ஒன்று...
அந்த கவிதை - என்
கண்ணில் விழுந்தவன்
என் காதலன் நீதானட...
தினேஷ் குமார் எ பி
11/4/15
முத்தம் தரும் தருணம்!
நான் முத்தம் தரும் தருணம்!
நீ போடா என்கையில்...
ஏன் பக்கம் வாட என்று கேட்கிறது எனது காதில்!
தினேஷ் குமார் எ பி
27/3/15
உனது புன்னகையில் அழகு
ஒரு தாய்மையின் பூரிப்பு!
உனது புன்னகையில் எத்தனை இனிமை காண்கிறேன்...
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது ? அமுதே!
உன் அன்பு கலந்த சிரிப்பில் நான் அடிமையாகிறேன்...
நான் எழுதித்தருகிறேன் அடிமை - சாசனம்
அன்பு கலந்த முத்ததில்...
தினேஷ் குமார் எ பி
18/3/15
உனது சிரிப்பில் சிந்திய கவிதை!
எனது விரல்களில் வழியும் கவிதை - நீ
வழிந்த கவிதைகள் அனைத்திலும் - நீ
காலை விடியலில் குட்டி கனவுகள் - நீ
எனது கனவுகள் எல்லாம் - நீ
குழந்தை இதழில் மலரும் மலர்கள் - நீ
மலர்ந்த மலர்கள் அனைத்திலும் - நீ
மண்ணில் விழும் மழைத்துளி - நீ
விழுந்த மழைதுளி அனைத்திலும் - நீ
காற்றில் ஏழும் சுவாசம் - நீ
உன் சுவாசத்தில் உயிர் வாழும் ஜீவன் நான்!
தினேஷ் குமார் எ பி
6/3/15
சந்தேகம் எனது கவிதைக்கு
13/2/15
24/1/15
1/1/15
இனிப்பான கண்ணிர் இந்த காதல்
11/12/14
அன்பால் என்னவள்!
என்னவளுக்கு இதில் எது பிடிக்கும் என
எனக்கு மட்டும் தான் தெரியும்...
அவள் கூட தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை...
ஏன் என்றால் எனக்கு பிடித்தால் மட்டுமே போதும்...
உடனே அது அவளுக்கும் பிடிக்கும் என்பால்!

























