15/6/15

விவசாயி இடம் விற்பனைக்கு

 இடம் விற்பனைக்கு விவசாயி

இம்மண்ணில் நெற்கதிர் நட்டேன்,
காய் ,கனிகளை பயிரிட்டேன்,
பருப்பு சாகுபடி செய்தேன்,
கம்பு, வேர்கடலை விளைவித்தேன்,
விற்கவில்லை!
ஆனால் கல் தான் நட்டேன்...
இடம் விற்பனைக்கு என
விற்றுவிட்டது!
இப்படிக்கு வருத்ததுடன் விவசாயி...

தினேஷ் குமார் எ பி

1.  ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய்.
2.  ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3.  ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4.  ஒரு ஏக்கரை பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்

10/6/15

என் நண்பன்!

birthday kavithai friend in tamil

ஈவுலகில் நான் இருந்தாலும் இல்லை என்றாலும்
எனது தாய்க்கு இன்னொரு மகன் இருப்பன் அவன் என் நண்பன்!

தினேஷ் குமார் எ பி

28/5/15

கண்ணில் பட்ட கவிதை

kan patriya kavithai

கண்ணில் பட்டவை அனைத்தும் காட்சிபடுதுகிறேன்!
ஏன் கைபேசியின் வழியாக...
காட்சிப்படுதுவதை கவிதையாகின்றன.
ஏன் கற்பனை வழியாக...
என் கற்பனைகளை அனுப்பிவிட்டேன் கவிதையாக...
இதோ இணைத்துள்ளேன் எனது காதலை....
இணைய வழியாக...

தினேஷ் குமார் எ பி

30/4/15

கண்ணில் விழுந்தவன் என் காதலன்

kadhalan tamil kavithaigal

நி பார்க்கும் பார்வையில் ஆயிரம்
கவிதை வீசி செல்கிறாய் என்மேல்!

உனது விழியின் வழியாக
அதிலிருந்து எடுத்துப்படித்தேன் ஒன்று...
அந்த கவிதை - என்
கண்ணில் விழுந்தவன் 

என் காதலன் நீதானட...

தினேஷ் குமார் எ பி

11/4/15

முத்தம் தரும் தருணம்!

நான் முத்தம் தரும் தருணம்!
நீ போடா என்கையில்...
ஏன் பக்கம் வாட என்று கேட்கிறது எனது காதில்!

தினேஷ் குமார் எ பி

27/3/15

உனது புன்னகையில் அழகு

tamil kavithai amma

ஒரு தாய்மையின் பூரிப்பு!
உனது புன்னகையில் எத்தனை இனிமை காண்கிறேன்...
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது ? அமுதே!
உன் அன்பு கலந்த சிரிப்பில் நான் அடிமையாகிறேன்...
நான் எழுதித்தருகிறேன் அடிமை - சாசனம்
அன்பு கலந்த முத்ததில்...

தினேஷ் குமார் எ பி

18/3/15

உனது சிரிப்பில் சிந்திய கவிதை!

எனது விரல்களில் வழியும் கவிதை - நீ
வழிந்த கவிதைகள் அனைத்திலும் - நீ
காலை விடியலில் குட்டி கனவுகள் - நீ
எனது கனவுகள் எல்லாம் - நீ
குழந்தை இதழில் மலரும் மலர்கள் - நீ
மலர்ந்த மலர்கள் அனைத்திலும் - நீ
மண்ணில் விழும் மழைத்துளி - நீ
விழுந்த மழைதுளி அனைத்திலும் - நீ
காற்றில் ஏழும் சுவாசம் - நீ
உன் சுவாசத்தில் உயிர் வாழும் ஜீவன் நான்!

தினேஷ் குமார் எ பி

6/3/15

சந்தேகம் எனது கவிதைக்கு

என்னவள் சந்தேகம் ஏன்?
பெண்கள் கவிதை எழுத விரும்புவதில்லை என்று ?
நான் கேட்டேன் கவிதைகள்
அனைத்தும் தன்னை பற்றி எப்படி எழுதும் என்று ?
என்னவள் கவிதை சிரித்தால்
எதுகை முனை இலக்கிய தமிழில்!


13/2/15

பெண்களின் உதடுகள் சிவப்பு

beautiful lips poem

பெண்களின் உதடுகள் சிவக்க வேண்டும்!
சயாங்களில் அல்ல ஆண்கள் தரும் சந்தோஷத்தில்...

24/1/15

அன்பு முத்தம்

பழச்சாற உனது உதடுகள் ?
பனித்துளி முத்தம் தருகிறாய் - அன்பே!
உன்மேல் படர்ந்தவுடன்.

1/1/15

இனிப்பான கண்ணிர் இந்த காதல்

kanneer desam kavithai in tamil

நான் தனிமையில் அழும்போது
என் கண்ணிர் உப்பகின்றன... அதுவே!
உன்னை நினைத்து உருக்கும் பொழுது!
அந்த கண்ணீரும் இனிக்கின்றன
உன்னைப்போலவே!
எனது உதட்டில் பட்டவுடன்....

11/12/14

அன்பால் என்னவள்!

anbu kavithai in tamil language
என்னவளுக்கு இதில் எது பிடிக்கும் என
எனக்கு மட்டும் தான் தெரியும்... 
அவள் கூட தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை...
ஏன் என்றால் எனக்கு பிடித்தால் மட்டுமே போதும்...
உடனே அது அவளுக்கும் பிடிக்கும் என்பால்!

14/11/14

இதயத்தின் ஏக்கம்!

heart kavithai tamil

நீ இமை மூடி பார்த்து செல்லும்பொழுது...
உதிர்ந்த சருகின் ஓசை எனது இதயத்தில்...
பொறுமையாகவே நடத்து செல்...
ஏன் இதயம் தாங்க...
- Dinesh Kumar AP

26/10/14

நீ என் இமை போன்றவள் !

sweet love poems

எனது கண்களில் கண்ணீர் கசிந்தால் 

கண் இமை முடி 

வரும் கண்ணீருக்கு  

தடை போடுகிறாய் 

அதனால் தான் என்னவோ

 நீ என் கண் இமையகிறாய்...

- தினேஷ் குமார் எ பி

 

10/9/14

உன் நினைவுகள் !

kadhal kavithaigal in tamil

தவறான எண்ணங்கள் கூட
என்னிடமிருந்து நீங்கி விடுகின்றன..
என் எண்ணத்தில் உன் எண்ணங்கள்
வைக்கும் போது அன்பே!
                                                                             - AP Dinesh Kumar

9/9/14

நண்பர்கள் அதிகம்

friendship kavithai in tamil

எனக்கு அதிகமான
நண்பர்கள் இருக்கிறார்கள்
என்பதில் எனக்கு
முகநுாலில் {Facebook} அல்ல
முகம் அறிந்து!
                                                              - AP Dinesh Kumar

2/9/14

என் கவிதைகள்!

tamil love sad kavithai photos


நான்
சந்தோஷமாக இருக்கும் போது
கவிதை படிக்கதோனும்.
சோகமாக இருக்கும் போது
எழுததோனும் - நான் படித்ததை விட
எழுதுனதே அதிகம்

14/8/14

சுதந்திர தினம் பள்ளியில்!

Indian independence day kavithai in tamil

அதிகாலை எழுந்து! பள்ளி சீருடை அணிந்து!
ஜாதி ,மதம் பார்க்காமல் கொடியை தாங்கும் குண்டூசி!
மேகங்கள் களைந்து! வருசையில் நின்ற நட்சத்திரம்!
கொடி வான்மேல் உயர்ந்து!
தலைமை ஆசிரியரின் கொடி ஏற்றம்!
சுதந்திர போராட்டத்தில் உயிர் தியாகம்!
செய்தவர்களுக்கு வீர வணக்கம்!
சிறுவர்களின் கலையாட்டம்!
விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு விருது!
ஆட்டம் பாட்டம் முடிந்தவுடன் கைகள் நிறைய இனிப்பு!
ஒவ்வொரு குழந்தை முகத்திலும் சிரிப்பு!

                                                                                - Dinesh kumar A P

12/8/14

மழையில் உருகும் காதல்!

Mazhai kadhal kavithai

இருவரும் தொலைவில் இருந்தாலும்...

 உன்னையும் என்னையும் உறைய வைக்கும்

 ஒருத்தியவள் மழை!

14/7/14

கல்லூரிகாலம் கவிதை

Tamil kavithai about college life

கல்லூரிகாலம்
அது ஒரு காலம்
மனதில் மழை பெய்த காலம்...

வாழ்க்கையில் பூ தூவப்பட்டதும்
இளமைக்கு சிறகு முளைத்ததும்
மகிழ்ச்சிக்கு அர்த்தம் பிறந்ததும் இக்காலமே..

‘’சொல்வதற்கு வார்த்தை இல்லை’’
என்ற வர்ணனைக்கு உட்பட்ட காலம்...

நினைக்க..நினைக்க..
கூடி மகிழ்ந்த நினைவுகளை சேகரித்துக் கொள்ள
இன்னொரு இதயம் உருவாக்கு என்று
என் புலன்களுக்கு புத்திமதிசொல்லும் காலம்..

வட்டதட்டைசுற்றி
வட்டமாய் அமர்ந்து
கழுவாதகைகளால் சோறூட்டி
வேற்றுமையை கழுவிக்கொண்ட காலம்…

மே மாத கத்திரியில்
மொத்த ஊரும் வெயிலை ஒதுங்கியிருக்க,
ஊர்சுற்ற உறவு படைத்த
ஓர் உதவியாளன் இந்த கல்லூரி...

இதோ,
நினைத்தால் வந்து சேர்கிறது..,
நடந்து சென்றபாதையெல்லாம்
கால்களுக்கான கூட்டணி...
கூடியிருந்த வேளையெல்லாம்
இவ்வுலகம் மறந்து சொர்க்கம்...

உதவுகின்ற தருணங்களில்
மாற்று உருவமாதாபிதா...
பிரிந்து நிற்கும் பொழுதெல்லாம்
தயக்கம் தங்காததாபத்தோடும்
மறுமுறை பார்க்க எண்ணும் ஏக்கத்தோடும்...


என் விதிரத்தின் தோல்களில்
சுருக்கம் முளைத்துவிட்டது..,
இன்னமுமே,
தோள்கொடுக்கும் பிரிவினர் தொட்ட என் கைகளில்
தொட்டுக்கொண்டேயிருக்கும் ரேகைபதிவுகளுக்கு சுருக்கமில்லை.

திருமணவழியே துணையை எண்ணுகையில்
ஒரு விரல்போதும்...
பிள்ளையை சார்ந்து துணையை எண்ணுகையில்
அதிகப்பட்சவிரல் ஆறோ ஏழோ தலைதூக்கும்...
கல்லூரி அளித்ததுணையை எண்ணிப்பார்க்கையில்
மனசாட்சிப்படியே,
பத்து விரல்பத்தவில்லை.

எப்பொழுதெல்லாம்
வேதனை சுமந்துகண்ணீர்சுரக்கின்றேனோ
அப்பொழுதெல்லாம்
கண்ணீர்துடைத்து
வேதனைக்கு கொள்ளிவைக்கும் கைகளெல்லாம்
கல்லூரி அறிமுகப்படுத்தியகைகளே!

அங்கே,
கொடுத்த பொருளை திருப்பிக்கொள்ள
அதிகாரம் காட்டினால்
அடி கொடுக்கும் கூட்டம்...
கடனாய் ஒன்று வாங்கையிலே
அனுமதி கேட்டால்
அழுகை இடும் ஜாதி...

வாழ்க்கை விடுதியில் விழுந்தவுடன்
வீட்டு உறவுமனம் கிள்ளும்...
மறுத்ததில்லை ...ஏற்றுக்கொள்கிறேன்.
நித்தியமாய்,
விடுதி மூடி வீடு திறந்தவுடன்
விடுதியில் இணைந்தகைகள்உயிரை அள்ளுகிறது.

கடந்த கால கல்லூரிவாசிகளே!
உன் மனதில்,
கல்லூரி காலம் ஒரு திரைப்படம் என்றால்,
வாழ்நாள் வரை ஓடுகின்ற திரைப்படம் அதுவே!

உள்ளத்துபடியே பார்த்தால்
அது காலம் அல்ல...
ஒற்றுமையின்காவியம்
ஒன்றிணைந்த ஜீவியம்
கோடிவிரல் சேர்ந்தெழுந்த நட்போவியம்..
                           
- ஹரிதாஸ் (வைர ஹரன்)

With emotional Tamil kavithai (poems) and motivational words, you may unlock the beauty of college life. With this collection of college life kavithai in Tamil, you can relive nostalgic college recollections and the painful conclusion of college life. Share the spirit of your academic adventure with relevant college quotes in Tamil, and bask in the allure of Tamil poems about life. With our collection of college life recollections quotes in Tamil, you can enter the world of emotions and nostalgia. Whether you're feeling nostalgic or want to share your college life experiences, our Tamil kavithai and quotes can help. Discover the essence of college life with our collection of Tamil college kavithai.