21/3/20

ஏகாந்த நிலவு நீ

nila patriya kavithaigal

சித்தம் குலைந்து உன்னை சித்தரிக்கும் சிலையாக நான் இருக்கிறேன்

அம்மம்மா  அகல விரித்து வைத்து உன்

கருவிழிகள் என்னை

ஒரு நிமிடம் சித்தனாக்கிவிட்டதடி

கொவ்வைச் செவ்வாய் திறந்து

எனை நீ அம்மா என்றழைக்கயிலே

 கொள்ளை இன்பம்

கொண்டேன் அடி

கண்பட போகுதுன்னு உன்னை பொத்தி வைக்க 

இவ்வையகத்தில்

உன்னை பெற

உவகை கொண்டேனடி 

அழகான உன் அழகை ஆதரித்து

உனை வளர்க்க ஆவல் எழும்புதடி

நெற்றிப் பொட்டில் வையம் உணர்த்தும் உன் லாவன்யத்துக்கு வார்த்தைகள் இல்லையடி என் கண்ணம்மா

 பூவாக. நீ சிரித்தால் என் மனதில் பூரிப்பு தோன்றுதடி

என் கவலையெல்லாம்

தீர்த்து வைத்த ஏகாந்த நிலவு நீயடி

- பாலகிருஷ்ணன்

Kavithai Competition

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!