28/2/20

தேடல்

இச்சிறு உலகில்,

துரிதமாக நாளும்

வெறுமையாக நானும்

கடக்கிறது.

வழக்கமாக ஆயினும்,

தனிமை பழக சிரமமாக,

செல்கிறது தினம்.

செல்லும் பாதையில்

கண்கள் இல்லை.

கவனமாக

உனைத் தேடுதலில்

மட்டுமே.

கண்ணெட்டும் தூரமே

நீ இருந்தாலும்,

உனை எங்கும் காணவில்லை,

என்னுள் தவிர..

- பாரதி

Kavithai Competition

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!