28/8/24

மேகத்தின் மோகம்

 கார்மேகமாய் தனிமையில் திரிந்தேன்; 

வண்ணமுகிலாய் என் வானம் வந்தாய்;
 
நாம் உரச மின்னலாய் என்னுள் கலந்தாய்;
 
என் மனதில், நீ முழுமதியாய் வளர்ந்தாய்!
 
நம் மோதலைக் கண்டு வானம், கரம் தட்டி மகிழும்;
 
நம் காதலைக் காண, புவியெங்கும் புன்னகை பூக்கும்!
 
உயிர்வளியாய் நீயும், நீரியமாய் நானும்,
 
வாழ்வில் ஐக்கியமானால் மாரியாய்
 
உலகம் சென்று, பூவின் மடி சாய்வோம்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!