சிவத்த மேனிக்காரி
கண்டாங்கிச் சேலைக்காரி
அச்சாரம் போட்டாச்சு மறைஞ்சுப் போவாதே
மாமன் மனசுக்குள்ள முழுவதும்
நிறைஞ்சிருக்க
கழனி எல்லாம் நிறைஞ்சு போச்சு
ஆத்தோரமா மாந்தோப்பில் காத்திருக்கேன் நானே
பாத்து பாத்து நடவு
செய்தா
பக்குவமா நெல்மணி பார்க்கலாம் கண்ணால
கதிரும் வெளஞ்சிடும்
கவலைகள் தீருமே
காளை மாடு பூட்டி
சந்தைக்கு
போகலாம் வெள்ளாமை
நிறைய வரும்
தைப் பொறந்தா கண்ணாலம் கட்டிடலாம்
இணைந்து சந்தோசமாக வாழலாம் ராசாத்தி
- உமா பாலகிருஷ்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please share your thoughts and comments!