மலைமீது வீசும் தென்றலே மலையாக வந்த காதலேஉன் பார்வை பார் போற்றும் கடலே என் பார்வை நீ போற்றும் அலையேகாதலுக்கு மொழியில்லை கண்கள் சொல்லும் வழியிதுஎத்தனை எத்தனை காலம் வாழும் மேலும் மேலும் இந்தக் காதல்சொல்லும் கதைகளைக் கேளு எண்ணில் அடங்காத இலைகளேகண்ணில் அடங்காத காவியங்களே காற்றில் அடங்காத கற்பனையேஉன்னிலும் என்னிலும் எண்ணிலும் அடங்காத உணர்வுகளே..காதல் இல்லாத துறைகள் உண்டோ காய்கள் இல்லாத கனிகள் உண்டோபிறர் மனம் காயப்படாமல் வாழ்ந்ததுண்டோ அன்புமழை பொழியட்டும்அதில் காசில்லாமல் குளிக்கட்டும் மனித மானுடம் பூக்கட்டும்காதல் எனும் கரைபோட்டு அன்பு எனும் மழையை நிரப்பிவிடுங்கள்அதில் அனைவரும் குளித்துவிடுங்கள் இதைவிடத் தீர்த்தமில்லைஇனி வருத்தமில்லை காதல் கரைவதில்லை அன்பு மழை சுடுவதில்லைஅன்புப் பூக்களைத் தேடி அலைய வேண்டாம் ஆயிரம் பூங்காக்களேஉங்களைத் தேடிவரும் அன்பை உள்ளத்திலும் உதட்டிலும் வைத்துக்கொண்டால்நண்பர்கள் கூட்டத்தைப்பார்த்து அன்புமழை பொழியத்தொடங்கியது..துளித்துளியாய் தூறலிட்டது மேகக்கூட்டம் அலையலையாய் அள்ளிக்கொண்டது அன்புக்கூட்டம்வண்ணங்கள் வேறு எண்ணங்கள் ஒன்று இது பூக்களின் பொன்மொழிஎத்தனை வண்னங்களில் பூக்கள் மழையால் மனப்பாடம் செய்யமுடியவில்லைஇறுதியில் வானவில்லை வரைந்து சென்றது எப்போதாவது தோன்றும் வானவில் அதிசயம்!எப்போதும் தோன்றும் தோழமை அன்பு அவசியம !!கோபம் கனிகள் சூழ்ந்த விதையாக இருக்கட்டும்கனியை சுவைத்துவிட்டு விதையை வீசி ஏறி குப்பையில்,அது ஒருநாள் அன்பு மழையில் துளிர்விடும்.
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please share your thoughts and comments!