14/8/24

பள்ளிப் பருவம்

தீப்பெட்டிகள் ரெயில்பெட்டிகளாகவும்,

சோடா மூடிகள் சக்கரமாகவும்,

மாறியிருந்த நாட்கள் அது...

மனம் முழுக்க மகிழ்ச்சியம்,

முகத்தில் புன்னகையும்,

குடியேறிய நாட்கள் அது...

மரத்தடியே மைதானமாகவும்,

நொன்டியே பொழுதுபோக்காகவும்,

நிலைத்திருந்த நாட்கள் அது...

பள்ளிப் பருவம் காணல் நீரானதே,

கல்லூரி வாசலில் காலெடுத்து வைத்தவுடன்......... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!