என் உள்ளம் நோகுதடா என் ஆசை கண்ணாலா....
உன் கரம் பற்றாமல் என் நடைபாதையின்
தூரம் நீண்டு போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...
உன் ஆசை தீர்க்காமல் என் நித்திரை இரவுகள்
செலவாகி போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...
உன் தலையணை சேராமல் என் கூந்தல் மல்லிகை எல்லாம்
வாடிப் போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...
உன் அழைப்புகள் இல்லாமல் என் அலைபேசி ஓசை
ஜீவனின்றி போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...
உன் இதழ் ஈரங்கள் என் கண்ணக்குழி நிறைக்காமல்
தூரம் விளகி போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please share your thoughts and comments!