கட்டி அணைக்க, தட்டிக் கொடுக்க, செல்லச் சண்டைகள் ஈட,
சண்டைக்குபின் வரும் மௌனத்தை கலைக்க,
செல்ல பெயர்கள் சொல்லி அழைக்க,
கெஞ்ச கொஞ்ச, பாசம் வைக்க, நேசம் வைக்க,
கீழே விழும் போது கைக் கொடுக்க,
கதறி அழும் போது தோள் கொடுக்க,
வெற்றி பெறும்போது அதைப்பார்த்து சிரிக்க ரசிக்க,
சொல்லாமல் நமக்காக பிரார்த்தனை செய்ய,
எதிர்பாராமல் நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற,
பாராட்ட சீராட்ட, தலை கொதி விளையாட, மொத்தத்தில்
உள்ளமாக உணர்வாக உதிரமாக உயிராக இருக்கும்
ஒரு உறவு கிடைத்துவிட்டால் போதும்,
வாழ்வின் அர்த்தம் புரிந்து விடும்,
வாழ்வே அழகாய் மாறி விடும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please share your thoughts and comments!