30/11/16

நிலவு பெண்ணானது!

vennila kavithaigal in tamil

யாரிடமும் சொல்லாமல்,
பூமியில் பெண்ணானது - நிலவு!

அவள் கண்விழித்து பார்த்தால்
பௌர்ணமி !

கண்களை சிமிட்டி பார்த்தால் !
வளர்பிறை !

நான் இப்பொழுது ஆகிறேன் !
உன்னால் தேய்பிறை !

நீ போதும் என்று சொல்லு !
ஒரு முறை !

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா


15/11/16

கரையும் பனி!

beautiful tamil kadhal kavithaigal
உன்னை பார்த்தபின்பு
ஓவ்வொரு பூக்களின் கர்வமும்,
காணாமல் போகின்றன…
கீழே விழும் - பனித்துளியில் !

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

14/11/16

பகலில் தோன்றாத நிலவு!

nilavu kavithai tamil
நீ இரவில் மட்டுமே
உன் முகம் காட்டுகிறாய்!
இப்பொழுது புரிந்தது
ஏன் இரவில் மட்டும்
நிலவு வருவதென்று !

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

11/11/16

ஒற்றை கால் நடனம்!

roja tamil kavithai

ரோஜாக்களே அசைந்து - அசைந்து
ஒற்றை காலுடன்
நடனம் எதற்கு?
அது சொன்னது !
உன் அன்னத்தின்
தலையில் சூடிக்கொள்ள என்று !!!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

9/11/16

மேக முத்தங்கள்!

உன் உதட்டின் மேலே
மூச்சுக்காற்று பட்டதும்...
தூவுமோ...என்
இதழினிலே
சில முத்தங்கள் !!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

1/11/16

தாமரை முகம்!

Thamarai kadhal kavithai
சிவப்பு
கம்பளத்தில்
தாமரை முகம் !
என்னவள் !

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா