27/3/15

உனது புன்னகையில் அழகு

tamil kavithai amma

ஒரு தாய்மையின் பூரிப்பு!
உனது புன்னகையில் எத்தனை இனிமை காண்கிறேன்...
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது ? அமுதே!
உன் அன்பு கலந்த சிரிப்பில் நான் அடிமையாகிறேன்...
நான் எழுதித்தருகிறேன் அடிமை - சாசனம்
அன்பு கலந்த முத்ததில்...

தினேஷ் குமார் எ பி

18/3/15

உனது சிரிப்பில் சிந்திய கவிதை!

எனது விரல்களில் வழியும் கவிதை - நீ
வழிந்த கவிதைகள் அனைத்திலும் - நீ
காலை விடியலில் குட்டி கனவுகள் - நீ
எனது கனவுகள் எல்லாம் - நீ
குழந்தை இதழில் மலரும் மலர்கள் - நீ
மலர்ந்த மலர்கள் அனைத்திலும் - நீ
மண்ணில் விழும் மழைத்துளி - நீ
விழுந்த மழைதுளி அனைத்திலும் - நீ
காற்றில் ஏழும் சுவாசம் - நீ
உன் சுவாசத்தில் உயிர் வாழும் ஜீவன் நான்!

தினேஷ் குமார் எ பி

6/3/15

சந்தேகம் எனது கவிதைக்கு

என்னவள் சந்தேகம் ஏன்?
பெண்கள் கவிதை எழுத விரும்புவதில்லை என்று ?
நான் கேட்டேன் கவிதைகள்
அனைத்தும் தன்னை பற்றி எப்படி எழுதும் என்று ?
என்னவள் கவிதை சிரித்தால்
எதுகை முனை இலக்கிய தமிழில்!